பதிவு செய்த நாள்
08 மார்2019
00:07
தமிழக வணிக வரி துறை, ஜனவரி வரை, 77 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது; இது, கடந்த ஆண்டை விட, 21 சதவீதம் வளர்ச்சி என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக அரசுக்கு, வணிக வரித் துறை மூலம், ஆண்டுதோறும் கிடைக்கும் வரி வருவாய் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு பின், இந்த வருவாய் அதிகரித்து வருகிறது.இது குறித்து, வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வணிக வரி மூலம், 2018 – 19ம் ஆண்டுக்கான வருவாய், ஜனவரி வரை, 77 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
ஜி.எஸ்.டி., வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாயும், வாட் வரி வாயிலாக, 37 ஆயிரம் கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது.இது, 2017 – 18ம் ஆண்டு மார்ச் வரையிலான மொத்த வருவாய், 73 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 21 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மார்ச் முடிவில், 5,000 கோடி ரூபாய் வரை வருவாய் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|