பதிவு செய்த நாள்
08 மார்2019
23:19
சென்னை:ஆண்டுக்கு, 86 லட்சம் பெண்கள், புதிதாக கடன் பெறுகின்றனர் என, ‘டிரான்ஸ் யூனியன் சிபில்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் நடத்திய ஆய்வின் விபரங்கள்:கடந்த, 2015 முதல், 2018ம் ஆண்டு வரையில், புதிதாக கடன் பெறும் பெண்களின் எண்ணிக்கை, 48 சதவீதமாக உயர்ந்துள்ளது; ஆண்களின் எண்ணிக்கை, 35 சதவீதமாக குறைந்துள்ளது.மேலும் ஆண்டுக்கு, 86 லட்சம் பெண்கள் புதிதாக கடன் பெறுவதும் தெரிய வந்துள்ளது.
இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில், 66 சதவீதம் பெண்கள் கடன் பெற்றுள்ளனர். பெண்களின் நிதி தேவையை வைத்து, அவர்களுக்கான கடன் திட்டம் மற்றும்சேவை ஆகியவற்றை, கடன் வழங்கும் நிறுவனங்கள் வடிவமைக்கின்றன. இது, வணிக கடன் பெறுவதற்கான ஊக்கத்தை துாண்டுகிறது. இதன் காரணமாக, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்களாக பெண்கள் அதிகரித்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில், 5.64 கோடி பெண்கள், தங்கக் கடன் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையில், கடந்த ஆண்டு, 13 சதவீதம் குறைந்தும், தங்கக் கடனே முன்னிலையில் உள்ளது. இருந்த போதிலும், 2017 மற்றும் 2018ல், பெண்களுக்கான வணிகக் கடன், 31 சதவீதம்; தனிநபர் கடன், 19 சதவீதம்; இரு சக்கர வாகன கடன், 14 சதவீதம் என, அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|