பதிவு செய்த நாள்
08 மார்2019
23:21
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டும் என, மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு கூறியதாவது: கடந்த ஆறு ஆண்டுகளில், ஒவ்வொரு துறையிலும் ஏற்றுமதியை மேம்படுத்த, ஊக்குவிப்பு திட்டங்கள், வரிச் சலுகைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.அதிலும், ஐந்து ஆண்டுகளாக, முக்கிய துறைகளின் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்து, செயல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதன் விளைவாக, உலகளவில் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில், இந்தியா, ஐந்தாவது இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது.நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், நாட்டின் சரக்கு ஏற்றுமதி, இதுவரை இல்லாத வகையில், 33 ஆயிரம் கோடி டாலராக, அதாவது, 23.10 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில், புதிய உச்சத்தை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நவரத்தினங்கள், ஆபரணங்கள், தோல், மருந்து, ஜவுளி உள்ளிட்ட, ஒன்பது துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தி, ஏற்றுமதியில், குறைந்தபட்சம், 16 சதவீத வளர்ச்சியை எட்ட, அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்., – ஜனவரி வரையிலான, 10 மாதங்களில், சரக்கு ஏற்றுமதி, 9.5 சதவீதம் உயர்ந்து, 27 ஆயிரத்து, 180 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|