பதிவு செய்த நாள்
08 மார்2019
23:27
சென்னை:‘‘உயிரிழப்பு ஏற்படுத்தாத வாகனத்தை தயாரிப்பதே, ‘வால்வோ’ கார் நிறுவனத்தின், 2020ம் ஆண்டு பார்வை,’’ என, இதன் இந்திய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சார்லஸ் பிரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது:இந்தியாவில், கடந்த ஆண்டில், 2,638 கார்கள் விற்பனையாகி, 2 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இது, 2017ம் ஆண்டில், 28 சதவீதமாகவும்; 2018ம் ஆண்டில், 30 சதவீதமாகவும் உள்ளது. தேர்தல் உட்பட பல்வேறு காரணங்களால், இந்த ஆண்டும் இதே அளவு விற்பனை, இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எங்களது,2020ம் ஆண்டு திட்டம்,விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தாத வாகனத்தை தயாரிப்பது. 2025ம் ஆண்டு தொலைநோக்கு திட்டம், 10 லட்சம் மின்சார கார்களை தயாரிப்பது. வால்வோவின் முதல் மின்சார கார், ‘எக்ஸ்.சி., – 90’ அடுத்த ஆண்டு, பெங்களூரில் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இந்தியாவில், 25 கார் விற்பனை நிலையங்கள் உள்ளன.இந்த ஆண்டில், தமிழகம் உட்பட மேலும் மூன்று விற்பனை நிலையங்கள் துவங்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|