'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில் முதலீடு50 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டது 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில் முதலீடு50 ஆயிரம் கோடி ரூபாய் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு ...
இலவச பொருளுக்கும் உள்ளீட்டு வரிப்பயன்:மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2019
00:13

புதுடில்லி:‘நுகர்பொருள் நிறுவனங்கள் வழங்கும், ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ திட்டத்தில், கூடுதலாக அளிக்கப்படும் பொருளுக்கும் உள்ளீட்டு வரி பயன் உண்டு’ என, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்துள்ளது.


பல நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்பை பிரபலப்படுத்தவும், விற்பனையை அதிகரிக்கவும், பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.அவற்றில் ஒன்றாக, ஒரு பொருளை வாங்கினால், அதே விலைக்கு, அதே போன்ற மற்றொரு பொருளை சேர்த்து அளிக்கும் திட்டமும் ஒன்று.


இவ்வாறு, ஒரு பொருளுடன் சேர்த்து இலவசமாக தரப்படும் பொருளுக்கு, தயாரிப்பு நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,சட்டத்தின் கீழ், உள்ளீட்டு வரிப் பயனை பெறுகின்றன.அதாவது, மூலப்பொருட்களுக்கு செலுத்தியவரியை, தயாரிப்பு பொருட்களின் விற்பனையில், நுகர்வோர் செலுத்தும், ஜி.எஸ்.டி., மூலம் திரும்ப பெற்று விடுகின்றன.


‘நோட்டீஸ்’



இந்நிலையில், ‘ஒரு பொருளுடன் இலவசமாக அளிக்கும் பொருளுக்கு, உள்ளீட்டு வரிப் பயன் பெற முடியாது; அவ்வாறு பெற்ற தொகையை, திரும்ப செலுத்த வேண்டும்’ என, வரித் துறை, ஏராளமான நுகர்பொருள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பியிருந்தது. இதனால், பல நிறுவனங்கள், ‘ஒன்றுக்கு ஒன்று’ இலவச திட்டத்தை நிறுத்திவிட்டன.


இதையடுத்து, இப்பிரச்னை குறித்து, வரித் துறை தெளிவுபடுத்த வேண்டும் என, தொழில் கூட்டமைப்புகள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.இந்நிலையில், ‘ஒரு பொருளுடன், இலவசமாக வழங்கப்படும் அதே போன்ற மற்றொரு பொருளுக்கும், உள்ளீட்டு வரிப் பயன் பெறலாம்’ என, மத்திய மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.


நுகர்வோர், பொருட்கள் வாங்க செலுத்தும் தொகையில், ஜி.எஸ்.டி., அடக்கம்என்பதால், இலவசமாக வழங்கப்பட்டாலும், அவை, ஒரே விலையில் தரப்படுவதால், அதற்கான உள்ளீட்டு வரிப் பயனை, நிறுவனங்கள் பெறலாம்.ஒரு பொருளுடன், இரு பொருட்களை இலவசமாக வழங்கினாலும், அவை ஒரே விலையில் இரு இலவச பொருட்களாகவே கருதப்படும்.


இலவச பொருளுக்கு, தனியே வரி செலுத்த தேவையில்லை.இது, ஒரே வகையான பொருளுக்குத் தான் பொருந்தும். ஒரு பொருளுடன், உயர் வரி விதிப்பில் உள்ள வேறு வகை பொருள் இலவசமாக வழங்கப்பட்டால், அதற்கான வரியை நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.அவ்வாறு இல்லாத பட்சத்தில், உள்ளீட்டு வரிப் பயனை திரும்பச் செலுத்த தேவையில்லை என, மத்திய மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.


இது குறித்து, யர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் வரி வல்லுனர், அபிஷேக் ஜெயின் கூறியதாவது:வரித் துறையின் விளக்கத்தால், இலவச பொருளுக்கு உள்ளீட்டு வரிப் பயன் உண்டா, இல்லையா என்ற குழப்பம் தீர்ந்துள்ளது. சர்வதேச நடைமுறையை பின்பற்றி, இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


மாதிரி மருந்துகள்


மருந்து நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளின் மாதிரிகளை, ஸ்டாக்கிஸ்டுகள், முகவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு இலவசமாக வழங்குகின்றன. இவற்றை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் சப்ளை செய்யப்பட்டதாக கருத முடியாது. அதனால், இலவசமாக அளிக்கப்படும், மாதிரி மருந்துகளுக்கும் வரி விதிப்பு பொருந்தாது.


மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)