பதிவு செய்த நாள்
09 மார்2019
23:29
மும்பை:பணப் பரிவர்த்தனை சார்ந்த, ‘ஸ்விப்ட்’ விதிமுறைகளை முழுமையாக பின்பற்றத் தவறிய, 36 வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, 71 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நிதித் துறையில், சர்வதேச பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல் பரிமாற்றத்திற்கு, ஸ்விப்ட் சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.இந்த தகவல் பரிவர்த்தனையில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, நிரவ் மோடி, முகுல் சோக்ஸி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, தலைமறைவாகி விட்டனர்.
உத்தரவு
இதையடுத்து, ஸ்விப்ட் சாப்ட்வேர் தொடர்பான நடைமுறைகளை உடனடியாக வலிமைப்படுத்துமாறு, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது; அத்துடன், மோசடி தடுப்பு நடவடிக்கைக்கான வழிகாட்டுதலையும் வழங்கியது.ஆனால், பெரும்பான்மையான வங்கிகள், இன்னும் முழு அளவில், ஸ்விப்ட் நடைமுறைகளை வலுப்படுத்தவில்லை என்பது, ரிசர்வ் வங்கியின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உதாரணமாக, குறிப்பிட்ட தொகைக்கு மேல் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும், கூடுதல் அனுமதி பெறும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. ஆனால், பல வங்கிகள் அதை செய்யாமல் உள்ளது தெரிய வந்துள்ளது. இதுபோல, ஒரு சில நடைமுறைகளை பின்பற்ற தவறியதால், 49 வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, ‘நோட்டீஸ்’ அனுப்பியது.
அதற்கு, வங்கிகள் அளித்த பதிலில் திருப்தியடையாத ரிசர்வ் வங்கி, எஸ்.பி.ஐ., – ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட, 36 வங்கிகளுக்கு, 71 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது; அத்துடன், ஸ்விப்ட் சாப்ட்வேர் செயல்பாட்டை வலுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
எந்த வங்கிகள்?
பேங்க் ஆப் பரோடா, கத்தோலிக் சிரியன் பேங்க், சிட்டி பேங்க், இந்தியன் பேங்க், கர்நாடகா பேங்க் ஆகியவற்றுக்கு, தலா, 4 கோடி ரூபாய் அபராதம்.பி.என்.பி., பரிபாஸ், சிட்டி யூனியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூகோ பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றுக்கு, தலா, 3 கோடி ரூபாய் அபராதம்.அலகாபாத் பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா பேங்க், டி.சி.பி., பேங்க், தேனா பேங்க், ஜம்மு – காஷ்மீர் பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், சிண்டிகேட் பேங்க் ஆகியவற்றுக்கு, தலா, 2 கோடி ரூபாய் அபராதம்.
பேங்க் ஆப் அமெரிக்கா, பார்கிலேஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் பேங்க், டி.பி.எஸ்., பேங்க், டைய்ட்சு பேங்க், எச்.எஸ்.பி.சி., -– ஐ.சி.ஐ.சி.ஐ., – ஐ.டி.பி.ஐ., ஆகியவற்றுக்கு, தலா, 1 கோடி ரூபாய் அபராதம்.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தஸ் இந்த் பேங்க், ஜே.பி., மார்கன் சேஸ் பேங்க், கரூர் வைஸ்யா பேங்க், பஞ்சாப் – சிந்து பேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பேங்க், தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க், யெஸ் பேங்க் ஆகியவற்றுக்கும், தலா, 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|