பதிவு செய்த நாள்
09 மார்2019
23:40
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, ‘டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் இந்தியா’ நிறுவனத்தில், 73.44 சதவீத பங்குகளை விற்பனை செய்து, வெளியேறியதன் மூலம், மத்திய அரசுக்கு, 1,050 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட சதவீத பங்கு விற்பனை மூலம், மத்திய அரசு, 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதில், டி.சி.ஐ., பங்கு விற்பனையுடன் சேர்த்து, இதுவரை, 57 ஆயிரத்து, 523 கோடி ரூபாய்
திரட்டப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று, 510 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது, நேற்று முன்தினம் காணப்பட்ட இப்பங்கின் விலையை விட, 17 சதவீதம் அதிகம்.டி.சி.ஐ., நிறுவன பங்குகளை, விசாகப்பட்டினம், பாரதீப், ஜவஹர்லால் நேரு மற்றும் தீனதயாள் துறைமுக பொறுப்பு கழகங்களின் கூட்டமைப்பு வாங்கியுள்ளது.
டி.சி.ஐ., நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முடிவை, மத்திய அரசு கைவிட்டதால், தேர்தல் நேரத்தில், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|