பதிவு செய்த நாள்
11 மார்2019
00:57
பணத்தை விலக்கி கொள்வதற்கான புதிய நெறிமுறைகளை அடுத்து, தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்., மீதான ஈர்ப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக வரி சேமிப்பை நாடுபவர்களை, இந்த பென்ஷன் திட்டம் அதிகம் ஈர்க்கிறது. என்.பி.எஸ்., கணக்கை ஆன்லைனிலும் துவக்கலாம். இந்த பென்ஷன் திட்டம் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்:
இரண்டு வகை கணக்கு: என்.பி.எஸ்., திட்டத்தில் டயர் – -I, டயர் – II என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. இந்த இரண்டு அடுக்கு கணக்குகளில் டயர் – I கட்டாயமானது. இரண்டாம் கணக்கு விருப்ப தேர்வுக்கு உட்பட்டது. கணக்கு துவங்கும் போது, இதற்கான இணைப்பு படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
என்ன வேறுபாடு?
என்.பி.எஸ்., திட்டத்தின் டயர்- – I, டயர்- – II கணக்குகளுக்கான நெறிமுறைகளும், பயன்களும் வேறுபட்டவை. டயர் – -I கணக்கு முதன்மையானது. இந்த கணக்கு இருந்தால் மட்டுமே, டயர் – -II கணக்கு துவக்க முடியும். டயர்- – II கணக்கில் செலுத்தும் பணத்தை விரும்பும்போது விலக்கி கொள்ளலாம்.
வரிச்சலுகை எப்படி?
இத்திட்டத்தின் முதன்மை கணக்கான டயர் – -I கணக்கிற்கு மட்டுமே வரிசலுகை பொருந்தும். இரண்டாவது கணக்கிற்கு வரிச்சலுகை கிடையாது. எனினும், அரசு ஊழியர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த முதலீட்டிற்கும் வரிச்சலுகை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதலீடு முறை: இரண்டு கணக்குகளுக்குமே முதலீட்டு முறை பொதுவானது. நிர்வாக கட்டணங்களும் ஒன்று தான். உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் நிதியை தேர்வு செய்து, விரும்பிய வகையில் முதலீடு செய்யலாம். டயர்- – I கணக்கில் இருந்து, இரண்டாம் கணக்கிற்கு முதலீட்டை மாற்ற முடியாது. ஆனால், டயர் – -II கணக்கில் இருந்து மாற்றுவது சாத்தியம்.
பணம் விலக்கல்: என்.பி.எஸ்., திட்ட உறுப்பினர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் பணத்தை பகுதி விலக்கல் செய்து கொள்ளலாம். மூன்று முறை மட்டுமே இது சாத்தியம். ஆனால், டயர்- – II கணக்கில் இத்தகைய கட்டுப்பாடு, எதுவும் இல்லை. மொத்தமாக விலக்கி கொள்வது உட்பட, நான்கு விதமாக பணத்தை பெறலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|