டி.சி.ஐ., பங்கு விற்பனைடி.சி.ஐ., பங்கு விற்பனை ... கிரெடிட் கார்டை சிறந்த முறையில்  பயன்படுத்தினால் கிரெடிட் கார்டை சிறந்த முறையில் பயன்படுத்தினால் ...
என்.பி.எஸ்., திட்டம் தொடர்பாக புதிய நெறிமுறைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2019
00:57

பணத்தை விலக்கி கொள்வதற்கான புதிய நெறிமுறைகளை அடுத்து, தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்., மீதான ஈர்ப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக வரி சேமிப்பை நாடுபவர்களை, இந்த பென்ஷன் திட்டம் அதிகம் ஈர்க்கிறது. என்.பி.எஸ்., கணக்கை ஆன்லைனிலும் துவக்கலாம். இந்த பென்ஷன் திட்டம் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்:

இரண்டு வகை கணக்கு: என்.பி.எஸ்., திட்டத்தில் டயர் – -I, டயர் – II என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. இந்த இரண்டு அடுக்கு கணக்குகளில் டயர் – I கட்டாயமானது. இரண்டாம் கணக்கு விருப்ப தேர்வுக்கு உட்பட்டது. கணக்கு துவங்கும் போது, இதற்கான இணைப்பு படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

என்ன வேறுபாடு?

என்.பி.எஸ்., திட்டத்தின் டயர்- – I, டயர்- – II கணக்குகளுக்கான நெறிமுறைகளும், பயன்களும் வேறுபட்டவை. டயர் – -I கணக்கு முதன்மையானது. இந்த கணக்கு இருந்தால் மட்டுமே, டயர் – -II கணக்கு துவக்க முடியும். டயர்- – II கணக்கில் செலுத்தும் பணத்தை விரும்பும்போது விலக்கி கொள்ளலாம்.

வரிச்சலுகை எப்படி?

இத்திட்டத்தின் முதன்மை கணக்கான டயர் – -I கணக்கிற்கு மட்டுமே வரிசலுகை பொருந்தும். இரண்டாவது கணக்கிற்கு வரிச்சலுகை கிடையாது. எனினும், அரசு ஊழியர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த முதலீட்டிற்கும் வரிச்சலுகை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதலீடு முறை: இரண்டு கணக்குகளுக்குமே முதலீட்டு முறை பொதுவானது. நிர்வாக கட்டணங்களும் ஒன்று தான். உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் நிதியை தேர்வு செய்து, விரும்பிய வகையில் முதலீடு செய்யலாம். டயர்- – I கணக்கில் இருந்து, இரண்டாம் கணக்கிற்கு முதலீட்டை மாற்ற முடியாது. ஆனால், டயர் – -II கணக்கில் இருந்து மாற்றுவது சாத்தியம்.

பணம் விலக்கல்: என்.பி.எஸ்., திட்ட உறுப்பினர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் பணத்தை பகுதி விலக்கல் செய்து கொள்ளலாம். மூன்று முறை மட்டுமே இது சாத்தியம். ஆனால், டயர்- – II கணக்கில் இத்தகைய கட்டுப்பாடு, எதுவும் இல்லை. மொத்தமாக விலக்கி கொள்வது உட்பட, நான்கு விதமாக பணத்தை பெறலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)