பதிவு செய்த நாள்
11 மார்2019
23:42
சென்னை:‘மை மேரி கோல்ட், மை ஸ்டார்ட் அப்’ போட்டியில் வெற்றி பெற்ற, தமிழகத்தை சேர்ந்த இரு பெண்களுக்கு, தொழில் துவங்க தலா, 10 லட்சம் ரூபாயை, ‘பிரிட்டானியா’ நிறுவனம் வழங்கி உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இல்லத்தரசிகளின், நிதி சுதந்திரம் மற்றும் தொழில் முனைவுகள் தொடர்பான கனவுகளை நனவாக்க, ‘மை மேரி கோல்ட், மை ஸ்டார்ட் அப்’ என்ற போட்டியை நாங்கள் நடத்தினோம்.இதில், 10 லட்சம் இல்லத்தரசிகள் விண்ணப்பித்தனர். இதில், 42 பேர் இறுதி சுற்றில் பங்கேற்றனர்.
தங்களின் வணிக எண்ணங்களை தெரிவித்து, 10 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், தமிழகத்திலிருந்து கஸ்துாரி ராஜவேல், உமா பரமேஸ்வரி இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் புதிய வியாபரம் துவங்க, தலா, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|