முட்டை விலை  385 காசுகளாக நிர்ணயம் முட்டை விலை 385 காசுகளாக நிர்ணயம் ...  6 மாதத்திற்கு பின் சென்செக்ஸ் 37,000 புள்ளியை தாண்டியது:பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்பால் உயர்வு 6 மாதத்திற்கு பின் சென்செக்ஸ் 37,000 புள்ளியை தாண்டியது:பா.ஜ., மீண்டும் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தையில் 5 நாட்களில் ரூ.2,700 கோடி முதலீடு:அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்கள் அசத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2019
23:57

புதுடில்லி:அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்கள், பங்குச் சந்தையில், ஐந்து நாட்களில், 2,741 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.உள்நாடு மற்றும் வெளிநாட்டு காரணிகளால், இந்த அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:நடப்பு மார்ச் மாதம், பங்குச் சந்தையின் முதல் ஐந்து வர்த்தக தினங்களில், அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்கள், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில், 11 ஆயிரத்து, 182 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.இதில், பங்குகளில், நிகர அளவில், 5,621 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்நிறுவனங்கள், இதே காலத்தில், 2,880 கோடி ரூபாய் அளவிலான, கடன் பத்திர முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளன.இந்த வகையில், மார்ச் 1 – - 8 வரையிலான, ஐந்து வர்த்தக தினங்களில், பங்குச் சந்தையில், அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்கள், நிகர அளவில், 2,741 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.இம்மாதம், 4ம் தேதி, மகாசிவராத்திரியை முன்னிட்டு, பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாக்., பயங்கரவாத முகாம்கள் மீது, இந்தியா நடத்திய தாக்குதல் காரணமாக, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசுக்கு மவுசு அதிகரித்து உள்ளது. இதன் தாக்கம், வரும் பொதுத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், அன்னிய முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்கள், ஆர்வத்துடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன.ரிசர்வ் வங்கி, சமீபத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் பத்திரங்களில், அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பை, தளர்த்தியுள்ளது. இதன் காரணமாகவும், பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றில், அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)