பதிவு செய்த நாள்
12 மார்2019
00:05
மும்பை:நேற்று, மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, ஆறு மாதங்களுக்கு பின், மீண்டும், 37 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.நேற்று முன்தினம், தலைமை தேர்தல் ஆணையம், லோக்சபா தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.
மீட்பு
இத்தேர்தலில், மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில், நேற்று, பங்குகளில் அதிக முதலீடு மேற்கொள்ளப்பட்டது.புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாக்., பயங்கரவாத முகாம்களை, இந்திய விமானப் படை, குண்டு வீசி அழித்தது. இந்த தாக்குதலில், பாக்.,கிடம் சிக்கிய, இந்திய விமானப் படையின் விங் கமாண்டர், அபிநந்தன், பத்திரமாக மீட்கப்பட்டார்.
மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, பாக்., அபிநந்தனை, இரண்டரை நாட்களில் விடுவித்தது.இது, ஆளும், பா.ஜ., அரசுக்கு, மக்களிடம் மிகப் பெரிய ஆதரவை பெற்றுத் தந்துள்ளது. இதனால், பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையில், பங்கு முதலீடு அதிகரித்துள்ளது என, சந்தையாளர்கள் தெரிவித்தனர்.
நேற்று, மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தின் இறுதியில், ‘சென்செக்ஸ்’ 382.67 புள்ளிகள் உயர்ந்து, 37,054 புள்ளிகளில் நிலை கொண்டது.இது, 2018, செப்., 19ல் காணப்பட்ட, 37,121.22 புள்ளிகளுக்கு பின் ஏற்பட்ட, அதிகபட்ச உயர்வாகும்.நீடிக்கும்தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 132.65 புள்ளிகள் உயர்ந்து, 11,168,05 புள்ளிகளில் நிலை பெற்றது.இதுவும், 2018, செப்., 26க்குப் பின் காணப்படும் அதிகபட்ச உயர்ந்த நிலையாகும்.மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத் துறை நிறுவனங்கள், உலோகம், வங்கி, ஆரோக்கிய பராமரிப்பு, பொறியியல் சாதனங்கள், அடிப்படை கட்டமைப்பு, வாகனம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் அதிக ஏற்றத்துடன், கைமாறின.பங்குச் சந்தையின் எழுச்சி, தேர்தல் முடியும் வரை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும், மே, 23ல், அதிக ஏற்ற, இறக்கம் இருக்க வாய்ப்பு உள்ளதாக, சந்தையாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஆசியா – ஐரோப்பாபொதுத் தேர்தல் அறிவிப்பும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் சாதகமான நிலவரங்களும், நேற்று இந்திய பங்குச் சந்தையின் எழுச்சிக்கு வித்திட்டுள்ளது. சீன அரசு, பொருளாதார மந்தநிலையில் இருந்து, நாட்டை எழுச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல, மேலும் பல ஊக்குவிப்பு கொள்கைகளை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, சீனாவில் நேற்று, பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. ஆசியாவின் இதர நாடுகளிலும், பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டன.ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சிறப்பாக இருந்தது.அன்னியச் செலாவணி சந்தையில், வர்த்தகத்தின் இடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 21 காசுகள் அதிகரித்து, 69.03 ரூபாயை எட்டியது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|