பதிவு செய்த நாள்
12 மார்2019
10:52
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிக எழுச்சியுடன் காணப்படுகின்றன. நேற்று முன்தினம், லோக்சபா தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. ஆளும், பா.ஜ., அரசு, வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இந்த நம்பிக்கையில், நேற்று, பங்குகளில் அதிக முதலீடு மேற்கொள்ளப்பட்டது. இதனால் சென்செக்ஸ் 6 மாதங்களுக்கு பிறகு 37 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. தொடர்ந்து இன்றைய வர்த்தகமும் அதிக உயர்வுடன் ஆரம்பமாகின.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (மார்ச் 12, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், 346.60 புள்ளிகள் உயர்ந்து 37,400.70ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 86.65 புள்ளிகள் உயர்ந்து 11,254.70ஆகவும் வர்த்தகமாகின.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கி குவிப்பது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகமும், உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு உயர்வு
இன்றைய அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.69.64ஆக வர்த்தகமானது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை விற்பனை செய்வதன் எதிரொலியாகவும், பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாகவும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|