6 மாதத்திற்கு பின் சென்செக்ஸ் 37,000 புள்ளியை தாண்டியது:பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்பால் உயர்வு 6 மாதத்திற்கு பின் சென்செக்ஸ் 37,000 புள்ளியை தாண்டியது:பா.ஜ., மீண்டும் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் இரண்டாவது நாளாக எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2019
10:52

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிக எழுச்சியுடன் காணப்படுகின்றன. நேற்று முன்தினம், லோக்சபா தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. ஆளும், பா.ஜ., அரசு, வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இந்த நம்பிக்கையில், நேற்று, பங்குகளில் அதிக முதலீடு மேற்கொள்ளப்பட்டது. இதனால் சென்செக்ஸ் 6 மாதங்களுக்கு பிறகு 37 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. தொடர்ந்து இன்றைய வர்த்தகமும் அதிக உயர்வுடன் ஆரம்பமாகின.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (மார்ச் 12, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், 346.60 புள்ளிகள் உயர்ந்து 37,400.70ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 86.65 புள்ளிகள் உயர்ந்து 11,254.70ஆகவும் வர்த்தகமாகின.

உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கி குவிப்பது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகமும், உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு உயர்வு


இன்றைய அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.69.64ஆக வர்த்தகமானது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை விற்பனை செய்வதன் எதிரொலியாகவும், பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாகவும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)