தங்கம் விற்பனை: 20 சதவீதம் குறைவு தங்கம் விற்பனை: 20 சதவீதம் குறைவு ...  நாட்டின் சில்லரை பணவீக்கம் உயர்வு:தொழில் துறை உற்பத்தி சரிவு நாட்டின் சில்லரை பணவீக்கம் உயர்வு:தொழில் துறை உற்பத்தி சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு வரும் எம்.எஸ்.டி.சி., பவரிக்கா நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2019
23:21

புதுடில்லி:மின்னணு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, பொதுத்துறை நிறுவனமான, எம்.எஸ்.டி.சி., இன்று பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.


‘மினி ரத்னா’ அந்தஸ்து பெற்றுள்ள இந்நிறுவனத்தில், அரசு தன்வசமுள்ள, 17 கோடியே, 60 லட்சம் பங்குகளை விற்பனை செய்கிறது. அதாவது, 25 சதவீத பங்குகளை விற்பனை செய்கிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில், அரசு, பங்கு விலக்கலை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், எம்.எஸ்.டி.சி.,யிலும் பங்கு விலக்கல் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.


பங்கு விலக்கல்


இந்நிறுவனத்தில், தற்போது, 89.85 சதவீத பங்குகளை அரசு தன் கைவசம் வைத்துள்ளது. பங்குகளை விற்பனை செய்யும் நிலையில் இது, 64.85 சதவீதமாக குறையும். இந் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஈக்யுரஸ் கேப்பிட்டல்’ மேற்கொள்கிறது .பங்கு விற்பனை,15ம் தேதியுடன் முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை, 121--–-128 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பவரிக்காஎரிசக்தி துறையை சேர்ந்த பவரிக்கா நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற் காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு விண்ணப்பம் செய்துள்ளது. பவரிக்கா, நாட்டின் முன்னணி டீசல் ஜெனரேட்டர் தயாரிப்பு நிறுவனமாகும்.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 76 லட்சத்து, 18 ஆயிரத்து, 427 புதிய பங்குகளையும், அதன் நிறுவனர்களின்,58 லட்சத்து, 3 ஆயிரத்து, 229 பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.


இந்த பங்கு வெளியீட்டில் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு வழங்க இருக்கும் பங்குகளும் அடக்கம்.இப்பங்கு வெளியீட்டின் மூலம், 800 கோடி ரூபாயை திரட்ட இந்நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.திரட்டப்படும் நிதியை குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வரும் திட்டங்களில் பயன்படுத்த இருப்பதாக தெரிகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)