பதிவு செய்த நாள்
12 மார்2019
23:25
தஞ்சாவூர்:மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திலிருந்து வடிவமைக்கப்பட்டு வரும், திருபுவனம் பட்டு சேலைக்கு, புவிசார் குறியீடு சான்றிதழ் கிடைத்துள்ளது.
தஞ்சாவூரில், நேற்று அறிவுசார் சொத்துரிமைக்கான அட்டர்னி சங்க தலைவரும், வழக்கறிஞருமான சஞ்சய்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:தஞ்சாவூர், திருபுவனத்தில், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திலிருந்து பட்டு சேலைகள், அப்பகுதி நெசவாளர்களால், கைத்தறி மூலம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த, 1955ம் ஆண்டு, ‘திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்’ தொடங்கப் பட்டது. இதில், 1,850 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த சங்கம், திருபுவனம் பட்டு சேலைகளுக்கு புவிசார் குறியீடு வேண்டும் என, 2014ம் ஆண்டு விண்ணப்பித்தது.
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநுால் துறையும், அறிவுசார் சொத்துரிமைக்கான அட்டர்னி சங்கமும் இணைந்து, திருபுவனம் பட்டு சேலையின் தரம், உற்பத்தி செய்யப்படும் விதம், நெசவாளர்களின் வாழ்வியல் முறை ஆகியவற்றை எடுத்துக் கூறியது.இதையடுத்து, தற்போது புவிசார் குறியீடுக்கான பதிவு உரிமைச்சான்று வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|