பதிவு செய்த நாள்
13 மார்2019
10:55
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரு தினங்களாக அதிக ஏற்றம் கண்ட நிலையில் இன்றைய வர்த்தகமும் உயர்வுடன் துவங்கின. வர்த்தகநேர துவக்கத்தில்(மார்ச் 13, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.95 புள்ளிகள் உயர்ந்து 37,670.61ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 22.10 புள்ளிகள் உயர்ந்து 11,323.30ஆகவும் வர்த்தகமாகின.
தொடர்ந்து காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 42.19 புள்ளிகள் உயர்வுடன் 37,577.85ஆகவும், நிப்டி 1.30 புள்ளிகள் சரிந்து 11.299.90ஆகவும் வர்த்தகமாகின.
கடந்த தினங்களில் பங்குகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சிறிய தள்ளாட்டத்துடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 8 காசுகள் உயர்ந்து ரூ.69.93-ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|