பதிவு செய்த நாள்
13 மார்2019
23:32
புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், வாகன விற்பனை, 8.06 சதவீதம் சரிவடைந்து, 14 லட்சத்து, 52 ஆயிரத்து, 78 ஆக குறைந்துள்ளது.இது, 2018, இதே மாதத்தில், 15 லட்சத்து, 79 ஆயிரத்து, 349 ஆக இருந்தது.
இது குறித்து, வாகன முகமை நிறுவனங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த ஆண்டு செப்டம்பரில், புதிய வாகனங்களுக்கான விபத்து காப்பீட்டு கட்டணம் உயர்த்தப் பட்டது. அது முதல், ஆறு மாதங்களாக, உள்நாட்டு வாகன விற்பனை மிகவும் மந்தமாகவே உள்ளது கவலை அளிக்கிறது.பலர், வாகனம் வாங்குவதை தள்ளிப் போட்டு உள்ளதும், விற்பனையை பாதித்துள்ளது.
முகவர்களிடம் ஏராளமான பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்கள் தேங்கியுள்ளன. இந்தாண்டு ஜனவரியில், பயணியர் வாகன விற்பனை அதிகரித்திருந்தது. பல நிறுவனங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்தியதே இதற்கு காரணம்.
மேலும், கடந்த ஆண்டு முடிவில், கையிருப்பை குறைக்க முகவர்கள் அளித்த சலுகைகள், இந்தாண்டு ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டதும், விற்பனை உயர துணை புரிந்தது.ஆனால், பிப்ரவரியில், மீண்டும் பயணியர் வாகன விற்பனை, 8.25 சதவீதம் குறைந்து, 2 லட்சத்து, 15 ஆயிரத்து, 276 ஆக சரிவடைந்தது.
இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 2 லட்சத்து, 34 ஆயிரத்து, 632 ஆக இருந்தது.இதே காலத்தில், இரு சக்கர வாகன விற்பனை, 7.97 சதவீதம் குறைந்து, 12 லட்சத்து, 22 ஆயிரத்து, 883லிருந்து, 11 லட்சத்து, 25 ஆயிரத்து, 405 ஆக சரிவடைந்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|