பதிவு செய்த நாள்
13 மார்2019
23:39
மும்பை:நேற்று, தனியார் துறையைச் சேர்ந்த, எச்.டி.எப்.சி., வங்கியின் சந்தை மூலதனம், முதன்முறையாக, 6 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.
ஏற்கனவே, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீஸ்’ நிறுவனங்கள், இந்த உச்சத்தை தாண்டிய நிலையில், மூன்றாவதாக, எச்.டி.எப்.சி., வங்கிக்கு இச்சிறப்பு கிடைத்துள்ளது.ஒரு நிறுவனத்தின் பங்குகளை, அதன் சந்தை விலையில் பெருக்கினால் கிடைக்கும் தொகை, சந்தை மூலதனம் எனப்படுகிறது.
நேற்று, மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இடையே, எச்.டி.எப்.சி., வங்கிப் பங்கின் விலை, 2.62 சதவீதம் உயர்ந்து, 2,227 ரூபாயாக, புதிய உச்சத்தை எட்டியது. இது, இவ்வங்கியின் சந்தை மூலதனம் உயர வழி வகுத்தது. வர்த்தகத்தின் முடிவில், பங்கு விலை, 55.50 ரூபாய் உயர்ந்து, 2,226.10 ரூபாயில் நிலை கொண்டது.இப்பங்கின் விலை, தொடர்ந்து ஐந்து வர்த்தக தினங்களாக உயர்ந்து வருகிறது.
இவ்வங்கியின் வாராக் கடன் பெருமளவு குறைந்துள்ளது. டிபாசிட், கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளது. காலாண்டிற்கு, சராசரியாக, 20 சதவீத லாபம் ஈட்டி வரும் இவ்வங்கியின் சொத்து மதிப்பும் வலுப் பெற்று வருகிறது. இதன் காரணமாக, இவ்வங்கி பங்குகளில் முதலீடு அதிகரித்துள்ளது.
சமீபத்தில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., விவகாரத்தில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நிதி நெருக்கடிக்கு ஆளான போதிலும், எச்.டி.எப்.சி., வங்கி எவ்வித தாக்கத்திற்கும் ஆளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடு செய்யலாம்
எச்.டி.எப்.சி., வங்கி பங்குகளை, தற்போதைய விலையில் வாங்கலாம் என, பெரும்பான்மை யான பங்கு ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தற்போது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி நிறுவனங்களின் சந்தை மூலதனம் முறையே, 8.50 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 7.48 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|