முட்டை விலை  370 காசுகளாக நிர்ணயம் முட்டை விலை 370 காசுகளாக நிர்ணயம் ...  ‘விப்ரோ’ அசிம் பிரேம்ஜி ரூ.52,000 கோடி நன்கொடை:சமூக நல முன்னேற்றத்திற்கு நிதி ஒதுக்குவதில் முதலிடம் ‘விப்ரோ’ அசிம் பிரேம்ஜி ரூ.52,000 கோடி நன்கொடை:சமூக நல முன்னேற்றத்திற்கு ... ...
வர்த்தகம் » ஜவுளி
திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பிரிட்டன் தரும் திடீர் நிர்ப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2019
23:57

திருப்பூர்:பின்னலாடைகளை விரைந்து அனுப்புமாறு பிரிட்டன் இறக்குமதியாளர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்களை நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர்.


திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், பிரிட்டன் நாட்டு வர்த்தகர்களிடமிருந்து, ஆடை தயாரிப்புக்கு, ஒவ்வொரு ஆண்டும் அதிகளவு, 'ஆர்டர்' பெறுகின்றன. அந்நாட்டு வர்த்தகர்கள், ஆடை தயாரிப்புக்கு, 60 நாட்கள் அவகாசம் வழங்குகின்றனர்.


ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து, வரும், 29ம் தேதிக்குள் பிரிட்டன் வெளியேறுகிறது. ஆனால் இன்னும், 'பிரக்ஸிட்' திட்ட வரைவை, பிரிட்டன் பார்லிமென்ட் அங்கீகரிக்கவில்லை. இதனால், பிரிட்டனில் குழப்ப நிலை நீடிக்கிறது.கூட்டமைப்பிலிருந்து பிரியும் போது, பிரிட்டன், புதிய ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்கும்; வரி விகிதங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.


இதனால் வர்த்தகம் பாதிப்பதை தடுக்கும் வகையில், பிரிட்டன் நாட்டு வர்த்தகர்கள், ஏற்கனவே வழங்கிய ஆர்டர் மீது, ஆடைகளை விரைந்து தயாரித்து அனுப்ப, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.


மறுசீரமைப்பு


திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர், கிரீஷ் கூறியதாவது:ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் பிரியும்போது, வரியினங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். தற்போது, நம் நாட்டிலிருந்து பெறும் ஆடைகளுக்கு, பிரிட்டனில், 13 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.


ஒருவேளை வரி உயர்த்தப்பட்டால், இறக்குமதி செய்யும் ஆடைகளுக்கு, அந்நாட்டு வர்த்தகர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டி வரும்; இது, பெரும் லாப இழப்பை ஏற்படுத்தும்.வர்த்தக பாதிப்புகளில் சிக்காமல் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக, அந்நாட்டு ஆடை இறக்குமதியாளர்கள், ஆடைகளை துரிதமாக தயாரித்து அனுப்ப, திருப்பூர் ஏற்றுமதியாளர்களை அறிவுறுத்துகின்றனர்.


சூழல் மாறும்



கப்பலில் அனுப்பப்படும் சரக்குகள், பிரிட்டன் சென்றடைய, 23 நாட்களாகிறது. எனவே, ஆடை தயாரிப்புக்கு வழங்கும் அவகாசத்தை, 30 நாட்களாக குறைத்துள்ளனர்.ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெற்றிகரமாக பிரிட்டன் பிரிந்த பின், குழப்பங்கள் நீங்கும்; அவசர நிலை வர்த்தக சூழல் மாறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)