‘ஜிம் – 2’ நிறுவனங்களுக்கு  ஆலோசனை அதிகாரிகள் ‘ஜிம் – 2’ நிறுவனங்களுக்கு ஆலோசனை அதிகாரிகள் ...  நாட்டின் ஏற்றுமதி உயர்வு வர்த்தக பற்றாக்குறை சரிவு நாட்டின் ஏற்றுமதி உயர்வு வர்த்தக பற்றாக்குறை சரிவு ...
புதிய தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல்:தீர்வு காண தவறினால் வரும் தலைமுறை பாதிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2019
23:37

புதுடில்லி:‘‘வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கு உடனடி தீர்வு காண தவறினால், நம் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவர்’’ என, ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்த் எச்சரித்துள்ளார்.


அவர், அமித் கபூர், சிரக் யாதவ் எழுதிய, ‘விழிக்கும் காலம் – சுதந்திரம் முதல் இந்திய பொருளாதாரத்தின் கதை’ என்ற நுாலுக்கு முடிவுரை வழங்கியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:பெருகி வரும் இளைய சமுதாயமும், அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்களும், இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குகின்றன.


மக்கள் தொகை


இந்திய மக்கள் தொகையில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர், 25 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். அதனால், ஆண்டுதோறும், இந்தியாவில், உழைப்பாளிகள் பிரிவில் இணைவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது.


மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி, நம் நாட்டில், ஆண்டுதோறும், ஒரு கோடிக்கும் அதிகமானோர், தொழில் புரிவதற்கு தகுதியுடைய வயதினர் பிரிவில் இணைகின்றனர்.உலக மக்கள் தொகையை பொறுத்தவரை, தொழில் புரியும் தகுதியை பெற்றோர் வயது, 15 – -64 ஆக உள்ளது. இது, 2050ம் ஆண்டு வரை விரிவடைந்து வரும் என, ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.


இந்த அளவிற்கு, மக்கள் தொகையில், தொழில் புரியும் தகுதி படைத்தோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கு ஏற்ப, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.இல்லையெனில், இந்தியா, பரவலான இளைய சமுதாயத்தினால் கிடைக்கக் கூடிய அளவிட முடியாத பயன்களை இழக்க நேரிடும். பெருகி வரும் இளையோருக்கு ஏற்ப, வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறினால், அது, வருங்கால சந்ததியினரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


‘ஆட்டோமேஷன்’


‘தொழிற்சாலைகளில், மனித, ‘ரோபோ’க்கள் தயாரிப்பு பணியை மேற்கொண்டால், வளரும் நாடுகளில், மூன்றில் இரு பங்கு வேலைவாய்ப்புகள் பறிபோகும்’ என, ஐ.நா.,வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.‘ஆட்டோமேஷன்’ எனப்படும், தன்னிச்சையாக பணிகளை செய்யும் சாப்ட்வேர் தொழில்நுட்பமும், மிக வலிமையான இளையோர் படையும், இந்தியாவிற்கு உள்ள, இரு பெரும் சவால்கள் எனலாம்.


இந்த சவால்களை திறம்பட கையாண்டு, நவீன தொழில்நுட்பங்களால் பறிபோகும் வேலைவாய்ப்புகளுக்கு இணையாக, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதில், ஆற்றல் மிக்க இளைய சமுதாயத்தினரின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.


அதனால், இந்தியா, கடந்த கால அனுபவத்தில் இருந்து, நிகழ்கால சவால்களை உடனடியாக சமாளிக்கும் கட்டாயத்தில் உள்ளது. தீர்வு காண முடியாத அளவிற்கு நிலைமை முற்றுவதற்கு முன், நெருக்கடியை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பொருளாதார வளர்ச்சி



கிழக்கு ஆசிய சந்தைகள், தாராளமயமாக்கல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, பெரும் பயனை அடையத் துவங்கியபோது, அதை இந்தியாவும் பின்பற்றியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், தற்போதைய இந்தியாவின் பொருளாதாரம், முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருக்கும்.

அமிதாப் காந்த்

தலைமை செயல் அதிகாரி, ‘நிடி ஆயோக்’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)