பதிவு செய்த நாள்
18 மார்2019
11:01
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் அதிக உயர்வுடன் ஆரம்பமாகின. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு அதிகமான ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவங்கின.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மார்ச் 18, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 326.06 புள்ளிகள் உயர்ந்து 38,350.38ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 82.15 புள்ளிகள் உயர்ந்து 11,509ஆகவும் வர்த்தகமாகின.
நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி சரிந்தது, தங்கம், பெட்ரோல் போன்றவற்றின் இறக்குமதி குறைந்ததன் எதிரொலியாக வர்த்தக பற்றாக்குறை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாகவும், தொடர்ந்து அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும், ரூபாயின் மதிப்பு உயர்வாலும் வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிப்டி 49 புள்ளிகள் உயர்வுடனும் வர்த்தகத்தை நீடித்தன.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.68.93ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|