தண்டனையில் இருந்து தப்பினார் அனில் அம்பானி தண்டனையில் இருந்து தப்பினார் அனில் அம்பானி ...  பொருளாதாரத்தை 8.5 சதவீதமாக உயர்த்தணும்; தேர்தல் அறிக்கையில் கட்சிகள் உறுதி அளிக்க, ‘அசோசெம்’ கோரிக்கை பொருளாதாரத்தை 8.5 சதவீதமாக உயர்த்தணும்; தேர்தல் அறிக்கையில் கட்சிகள் ... ...
இன்று கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில்; ரியல் எஸ்டேட் வரி அமலாக்கம் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2019
23:36

புதுடில்லி: இன்று கூடும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ரியல் எஸ்டேட் துறைக்கு குறைக்கப்பட்ட வரி தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு செய்யப்பட உள்ளது.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 34வது கூட்டம், இன்று நடைபெற உள்ளது. ‘காணொலி காட்சி’ மூலம் நடத்தப்படும். இக்கூட்டத்தில், மாநிலங்களின் நிதிஅமைச்சர்கள் பங்கேற்பர்.

கடந்த மாதம் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், கட்டுமான பணியில் உள்ள வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., 5 சதவீதம்; குறைந்த விலை வீடுகளுக்கு, 1 சதவீதம் என, குறைத்து நிர்ணயிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த புதிய வரி விகிதங்கள், ஏப்ரல், 1 முதல் அமலுக்கு வர உள்ளன. இதன் அமலாக்கம் தொடர்பான அம்சங்கள், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. சிமென்ட் வரி குறைப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும் என, தெரிகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் புதிய முடிவுகளை எடுக்கவோ அல்லது அறிவிக்கவோ வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஏப்ரல் முதல் அமல்!
குடியிருப்புகளுக்கான, ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடுகளுக்கான, ஜி.எஸ்.டி., 8 சதவீதத்தில் இருந்து, 1 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல், 1 முதல், புதிய வரி விகிதம் அமலுக்கு வர உள்ளது. புதிய வரி விதிப்பின் கீழ், கட்டுமான நிறுவனங்கள் உள்ளீட்டு வரிப் பயன் பெற முடியாது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)