இன்று கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில்; ரியல் எஸ்டேட் வரி அமலாக்கம் ஆய்வு இன்று கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில்; ரியல் எஸ்டேட் வரி அமலாக்கம் ஆய்வு ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
பொருளாதாரத்தை 8.5 சதவீதமாக உயர்த்தணும்; தேர்தல் அறிக்கையில் கட்சிகள் உறுதி அளிக்க, ‘அசோசெம்’ கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2019
23:40

புதுடில்லி: ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 8.5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என, அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்க வேண்டும்’ என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, ‘அசோசெம்’ வலியுறுத்தியுள்ளது.

இந்த அமைப்பு, மத்தியில் அமைய உள்ள புதிய அரசு, நாட்டின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய திட்டங்களை பட்டியலிட்டு, அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் ஏப்., 11ல் துவங்கும் லோக்சபா தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிட உள்ளன. அதில், ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, ஆண்டுக்கு, 8 – -8.5 சதவீதமாக உயர்த்தி, 2025ல், 5 லட்சம் கோடி டாலராக, அதாவது, 350 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என, உறுதி அளிக்கப்பட வேண்டும்.

‘ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசின் பங்கு மூலதனம் குறைக்கப்படும். 20 சதவீதத்திற்கு மேல், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு, 1 சதவீதம் வரி தள்ளுபடி வழங்குவோம். ‘குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, வருமான வரியை குறைப்போம்’ என, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்.

கல்வி செலவு:
மாணவர்களின் கல்விச் செலவை குறைக்க, வெளியில் இருந்து பெறப்படும் கல்விச் சேவைகளுக்கான, ஜி.எஸ்.டி., தற்போதைய, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். தொழில் துறை வளர்ச்சிக்கு, வங்கி சாராத நிதியங்களை ஏற்படுத்த வேண்டும். இதனால், தொழிலகங்கள், குறைந்த வட்டியில் விரைவாக கடன் பெறலாம்.

விவசாயிகள் வருவாயை அதிகரிக்க, வேளாண் கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றின் குத்தகை அடிப்படையிலான சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கலாம். வேளாண்துறைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் ஏற்படுத்தி, விவசாயிகளுக்கு மூலதன மானியம் வழங்கலாம்.விரைவில் அழுகும் பொருட்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க, விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில், குளிர்பதன கிடங்குகள் அமைக்கலாம். வேளாண் பொருட்கள், தேக்கமின்றி சீராக வினியோகிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தலாம்.

தயாரிப்பு துறையை ஊக்குவிக்க, ஜி.எஸ்.டி., வரியினங்களை, 8 மற்றும் 16 சதவீதம் என, இரண்டாக குறைக்கலாம்.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வருமான வரி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தற்போதைய, 25 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். இதே காலத்தில், ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களின் வரி, 30 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக குறைக்க வேண்டும்.

வாடகை வருவாய்:
வீடு வாடகை வருவாய்க்கு, 10 சதவீதம் என, ஒரே வரி விகிதம் நிர்ணயிக்க வேண்டும். வாடகை வாயிலான வருவாய் விகிதத்தை உயர்த்த, அதற்கான வருமான வரிக் கழிவை, 30 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பங்கு முதலீடுகளுக்கு, நீண்ட கால மூலதன ஆதாய வரியில் விலக்கு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை, அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)