தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிவு ... ‘ஜி.எஸ்.டி., போன்ற அமைப்புகள் தேவை’ ‘ஜி.எஸ்.டி., போன்ற அமைப்புகள் தேவை’ ...
ஐ.டி.பி.ஐ., பேங்க் பெயர் மாற்ற ரிசர்வ் வங்கி மறுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2019
23:14

புதுடில்லி: ஐ.டி.பி.ஐ., பேங்க் பெயரை மாற்றுவதற்கு, ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளது.

ஆயுள் காப்பீட்டு துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., நிறுவனம், இந்தாண்டு ஜனவரியில், ஐ.டி.பி.ஐ., வங்கியில், அதன் பங்கு மூலதனத்தை, 51 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலம், இவ்வங்கியின் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் நிறுவனம் என்ற சிறப்பு, எல்.ஐ.சி.,க்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, ஐ.டி.பி.ஐ., வங்கி இயக்குனர் குழு, வங்கியின் பெயரை, ‘எல்.ஐ.சி., பேங்க்’ அல்லது ‘எல்.ஐ.சி., – ஐ.டி.பி.ஐ., பேங்க்’ ஆக மாற்ற அனுமதி கோரி, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்தது.

ஆனால், பெயர் மாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்து விட்டது. அதனால், ஐ.டி.பி.ஐ., பேங்க் என்ற பெயரிலேயே வங்கி தொடர்ந்து செயல்படும் என, இயக்குனர் குழு தெரிவித்துள்ளது.

தனியார் துறை:
இதனிடையே, ரிசர்வ் வங்கி, ஐ.டி.பி.ஐ., வங்கியை, பொதுத் துறையில் இருந்து, தனியார் துறை வங்கிகள் பிரிவிற்கு மாற்றியுள்ளது.கடந்தாண்டு, செப்டம்பரில், ஐ.டி.பி.ஐ., வங்கியில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 86 சதவீதமாக இருந்தது. எல்.ஐ.சி.,யின் பங்கு மூலதனம், 8லிருந்து, 51 சதவீதமாக உயர்ந்ததை அடுத்து, மத்திய அரசின் பங்கு மூலதனம், 46.46 சதவீதமாக குறைந்தது.இதனால், ஐ.டி.பி.ஐ., வங்கி, தனியார் துறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இழப்பு தொடர்கிறது:
நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், அக்டோபர் – டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், ஐ.டி.பி.ஐ., வங்கி, 4,185 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.இந்த இழப்பு, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 1,524 கோடி ரூபாயாக இருந்தது. வாராக் கடன் அதிகரிப்பால், இவ்வங்கி தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக இழப்பை சந்தித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)