பதிவு செய்த நாள்
25 மார்2019
06:24
பங்குச்சந்தை கடந்த வாரம் சரிவுடன் முடிந்தன. தொடர் ஏறுமுகம் காணப்பட்ட நிலையில் வார இறுதி வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 222 புள்ளிகள் குறைந்து, 38,165 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 64 புள்ளிகள் குறைந்து, 11,457 புள்ளியாக இருந்தது. எனினும் நிகர அடிப்படையில் ஏறுமுகம் உண்டானது.
இந்தியாவுக்கான வளர்ச்சி கணிப்பை சர்வதேச ரேட்டிங் அமைப்பான பிட்ச் குறைத்தது தாக்கம் ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் லாபம் பார்ப்பதில் ஆர்வம் காட்டினர். சர்வதேச மந்தநிலை தொடர்பான தகவல்கள் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் போக்கு ஆகிய அம்சங்களும் தாக்கம் செலுத்தின. பிரெக்சிட் ஒப்பந்த சிக்கல், அமெரிக்கா- சீனா வர்த்தக பேச்சுவார்த்தை ஆகியவையும் முக்கிய அம்சங்களாக அமைந்தன.
ஏறுமுகம் கண்ட பங்குகள்:
1.என்.டி.பி.சி – 134.05 (3.67)2. லார்சன் – 1,394.00 (1.54)3. ஆசியன் பெயிண்ட்ஸ்- 1,470.70 (1.08)
இறங்குமுகம் கண்ட பங்குகள்:
1. டாடா மோட்டார்ஸ் – 175.40 (2.47)2. ரிலையன்ஸ் – 1,342.10 (2.44)3. மாருதி சுசூகி – 6,558.00 (1.84)
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|