பதிவு செய்த நாள்
25 மார்2019
06:27
அண்மை காலத்தில் பல வர்த்தக நிறுவனங்கள், என்.சி.டி., என குறிப்பிடப்படும் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டன. மேலும் பல நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்ட தயாராகி வருகின்றன. கடன் பத்திரங்களில் முதலீட்டின் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்:
ரிஸ்க் அம்சம்:
வைப்பு நிதிகளோடு ஒப்பிடும் போது கடன் பத்திரங்கள் அதிக பலன் அளிக்க கூடியவை என்றாலும், இவை வைப்பு நிதிகள் போல, ‘ரிஸ்க்’ இல்லாதவை அல்ல. இவற்றில் வட்டி வருமானம் அல்லது அசல் திருப்பி செலுத்தப்படாமல் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே, இவற்றின் ரிஸ்க் தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
கிரெடிட் ரேட்டிங்:
கடன் பத்திரங்கள் முதலீடு ரிஸ்க் கொண்டது என்பதால் இவற்றுக்கான கிரெடிட் ரேட்டிங்கை கவனிக்க வேண்டும். கிரிசில், கேர், இக்ரா உள்ளிட்ட அமைப்புகள் ரேட்டிங்கை வழங்குகின்றன. ‘ஏஏஏ’ போன்ற அதிக ரேட்டிங் இருந்தால் நல்லது. ஆனால், ரேட்டிங் நம்பகத்தன்மையை குறிப்பதே தவிர, உறுதி அளிப்பது அல்ல.
கால அளவு:
நிறுவனங்கள் பல்வேறு கால அளவில் கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. உங்கள் தேவைக்கேற்ப கால அளவு கொண்டவற்றை தேர்வு செய்ய வேண்டும். இவற்றில் பணமாக்கும் தன்மை குறைவு என்பதால், பொதுவாக குறுகிய கால இலக்குகளுக்கு முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
வட்டி விகிதம்:
கடன் பத்திரங்கள் வழங்கும் வட்டி விகிதத்தையும் கவனிக்க வேண்டும். அதிக வட்டி வருமானம் ஈர்ப்புடையதாக இருந்தாலும், அதை மட்டுமே முக்கியமாக கருதக்கூடாது. நிறுவனத்தின் பணத்தை திரும்ப செலுத்தும் ஆற்றலை முக்கியமாக கருத வேண்டும். கடந்த கால செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும்.
ஈட்டுறுதி பாதுகாப்பு:
கடன் பத்திரங்களில் ஈட்டுறுதி கொண்டவை, ஈட்டுறுதி இல்லாதவை என இரு வகை உள்ளன. செக்யூர்டு எனப்படும் ஈட்டுறுதி கொண்டவை எனில், பத்திரங்களுக்கு நிகரான சொத்து பின்னே இருக்கும். இவற்றுக்கான வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும் இவற்றை நாடுவது ஏற்றது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|