ஜனவரியில் 8.96 லட்சம் வேலைவாய்ப்பு உருவானது: 17 மாதங்கள் காணாத வகையில் அதிகரிப்புஜனவரியில் 8.96 லட்சம் வேலைவாய்ப்பு உருவானது: 17 மாதங்கள் காணாத வகையில் ... ... வங்கி வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் உயருமா வங்கி வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் உயருமா ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன் பத்திரங்கள் முதலீட்டில் சிறந்த பலன் பெறும் வழிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2019
06:27

அண்மை காலத்தில் பல வர்த்தக நிறுவனங்கள், என்.சி.டி., என குறிப்பிடப்படும் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டன. மேலும் பல நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்ட தயாராகி வருகின்றன. கடன் பத்திரங்களில் முதலீட்டின் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

ரிஸ்க் அம்சம்:
வைப்பு நிதிகளோடு ஒப்பிடும் போது கடன் பத்திரங்கள் அதிக பலன் அளிக்க கூடியவை என்றாலும், இவை வைப்பு நிதிகள் போல, ‘ரிஸ்க்’ இல்லாதவை அல்ல. இவற்றில் வட்டி வருமானம் அல்லது அசல் திருப்பி செலுத்தப்படாமல் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே, இவற்றின் ரிஸ்க் தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

கிரெடிட் ரேட்டிங்:
கடன் பத்திரங்கள் முதலீடு ரிஸ்க் கொண்டது என்பதால் இவற்றுக்கான கிரெடிட் ரேட்டிங்கை கவனிக்க வேண்டும். கிரிசில், கேர், இக்ரா உள்ளிட்ட அமைப்புகள் ரேட்டிங்கை வழங்குகின்றன. ‘ஏஏஏ’ போன்ற அதிக ரேட்டிங் இருந்தால் நல்லது. ஆனால், ரேட்டிங் நம்பகத்தன்மையை குறிப்பதே தவிர, உறுதி அளிப்பது அல்ல.

கால அளவு:
நிறுவனங்கள் பல்வேறு கால அளவில் கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. உங்கள் தேவைக்கேற்ப கால அளவு கொண்டவற்றை தேர்வு செய்ய வேண்டும். இவற்றில் பணமாக்கும் தன்மை குறைவு என்பதால், பொதுவாக குறுகிய கால இலக்குகளுக்கு முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.

வட்டி விகிதம்:
கடன் பத்திரங்கள் வழங்கும் வட்டி விகிதத்தையும் கவனிக்க வேண்டும். அதிக வட்டி வருமானம் ஈர்ப்புடையதாக இருந்தாலும், அதை மட்டுமே முக்கியமாக கருதக்கூடாது. நிறுவனத்தின் பணத்தை திரும்ப செலுத்தும் ஆற்றலை முக்கியமாக கருத வேண்டும். கடந்த கால செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும்.

ஈட்டுறுதி பாதுகாப்பு:
கடன் பத்திரங்களில் ஈட்டுறுதி கொண்டவை, ஈட்டுறுதி இல்லாதவை என இரு வகை உள்ளன. செக்யூர்டு எனப்படும் ஈட்டுறுதி கொண்டவை எனில், பத்திரங்களுக்கு நிகரான சொத்து பின்னே இருக்கும். இவற்றுக்கான வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும் இவற்றை நாடுவது ஏற்றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)