பதிவு செய்த நாள்
25 மார்2019
06:28
பி.எப்., உறுப்பினர்கள் தங்கள் தொகையை விலக்கி கொள்ளும் போது, பி.எப்., தொகை கணக்கீடு செய்யப்படும் விதம் தொடர்பான தகவல் குறுஞ்செய்தி அல்லது இ – மெயில் மூலம் அளிக்கப்படும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பி.எப்., தொகையை விலக்கி கொள்ளும் போது, கையில் கிடைக்கும் தொகை கணக்கிடப்படும் முறை தொடர்பாக, உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய குழப்பத்தை போக்கும் வகையில் இந்த வசதி உத்தேசிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு, இது தொடர்பான கணக்கிடும் தகவல்களை ( ஒர்க்ஷீட்) அவர்கள் பதிவு செய்துள்ள மொபைல்போன் அல்லது இ – மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு, பி.எப்., பிராந்திய அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், நேரில் விண்ணப்பித்தாலும் இந்த வசதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் மூலம் உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைக்கும் தொகை குறித்த விபரங்களை தெளிவாக புரிந்து கொள்ளலாம். இது, வெளிப்படையான தன்மைக்கு உதவும்.இதே போலவே, பென்ஷன் பெறும் உறுப்பினர்களுக்கும், எந்த அளவு தொகை பென்ஷன் கணக்கில் ஒதுக்கப்பட்டுள்ளது, பென்ஷன் தொகை எப்படி கணக்கிடப்படுகிறது என்பது தொடர்பான தகவல்களும், பென்ஷன் பெறும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|