பதிவு செய்த நாள்
27 மார்2019
10:57

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளில் உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மார்ச் 27, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 205.47 புள்ளிகள் உயர்ந்து 38,438.88ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 53.45 புள்ளிகள் உயர்ந்து 11,536.70ஆகவும் வர்த்தகமாகின.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றமான சூழல், வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்படுவது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிவு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 12 காசுகள் சரிந்து ரூ.69.98ஆக வர்த்தகமானது. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்து இருப்பதன் எதிரொலியாக, ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|