பதிவு செய்த நாள்
30 மார்2019
00:05
சென்னை: ‘‘சர்வதேச பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளதால், உலக நாடுகளிடையே, இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது,’’ என, மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர், கிருஷ்ணமூர்த்தி சுப்ர மணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அவர், சென்னையில், இந்திய தொழிலக கூட்டமைப்பின் கருத் தரங்கில் பேசியதாவது: தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகமான பின், தற்போது தான் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா மிகச் சிறந்த வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு முன், நாட்டின் பணவீக்கம், 10 சதவீதத்தை எட்டியிருந்தது. இது, தற்போது, 4.5 சதவீதத்திற்குள் உள்ளது.பணவீக்கம் குறைந்ததால், மக்களின் தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு சீர்திருத்த திட்டங்களால், பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.
ஜி.எஸ்.டி., அறிமுகம், இந்தியாவின் வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் துாண்டுகோலாக அமைந்தது.திவால் சட்டம், கடன் பெறுபவரின் பொறுப்பை உணர்த்தி, ஒழுங்கு முறையை கொண்டு வந்துள்ளது.சர்வதேச அளவில் எழுந்த எண்ணற்ற சவால்களை சந்தித்த சூழலிலும், நாடு, மிகச் சிறப்பான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை கண்டுள்ளது.இதனால், உலக நாடுகள் மத்தியில், இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|