பதிவு செய்த நாள்
30 மார்2019
00:14
புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளிட்ட, ஐந்து வங்கிகளுக்கு, மத்திய அரசு, 21 ஆயிரத்து, 428 கோடி ரூபாய் பங்கு மூலதனம் வழங்குகிறது.
இதற்காக, இவ்வங்கிகள், மத்திய அரசுக்கு முன்னுரிமை பங்குகள் வழங்கும் தீர்மானத்திற்கு, பங்கு முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.வாராக் கடன் பிரச்னை யால், பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகளின் சொத்து மதிப்பு குறைந்து, மூலதன இருப்பு விகிதத்தை பராமரிக்க முடியாமல் சிரமப்படுகின்றன.
அத்தகைய பொதுத் துறை வங்கிகளின் நிதியாதாரத்தை மேம்படுத்த, 2017 அக்டோபரில், 2.11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மறு பங்கு மூலதன திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.இதில், பட்ஜெட் ஒதுக்கீட்டில், 18 ஆயிரத்து, 139 கோடி ரூபாய்; மறு பங்கு மூலதன கடன் பத்திரங்கள் மூலம், 1.35 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். வங்கிகள், நிதிச் சந்தையில் எஞ்சிய, 58 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டிக் கொள்ளும் என, தெரிவிக்கப்பட்டது.
பேங்க் ஆப் பரோடா:;
இத்திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகள், மத்திய அரசின் பங்கு மூலதனத்தை, இரண்டு ஆண்டுகளாக பெற்று வருகின்றன.இந்த வகையில், பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய ஐந்து வங்கிகளுக்கு, 21 ஆயிரத்து, 428 கோடி ரூபாய் பங்கு மூலதனம் வழங்கப்படுகிறது.
இதற்காக இவ்வங்கிகள், சிறப்பு பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய முன்னுரிமை பங்குகளை, மத்திய அரசுக்கு வழங்க உள்ளன.இதற்கு, இந்த ஐந்து வங்கிகளின் பங்கு முதலீட்டாளர்கள் கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, பஞ்சாப் நேஷனல் பேங்க், பங்கு ஒன்று, 71.66 ரூபாய் வீதம், 80.20 கோடி பங்குகளை வெளியிட்டு, 5,908 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளும். பேங்க் ஆப் பரோடா, முன்னுரிமை பங்குகள் மூலம், 5,042 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பங்கு ஒன்று, 78.84 ரூபாய் வீதம், 52.15 கோடி முன்னுரிமை பங்குகளை வெளியிட்டு, 4,112 கோடி ரூபாய் பெற உள்ளது.
உயரும்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பங்கு ஒன்று, 14.12 ரூபாய் வீதம், 3,806 கோடி ரூபாய் மதிப்பிலான முன்னுரிமை பங்குகளை வெளியிட முடிவு செய்து உள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பங்கு ஒன்று, 37.25 ரூபாய் வீதம், 68.72 கோடி முன்னுரிமை பங்குகளை வெளியிட்டு, 2,560 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இதன் மூலம், இவ்வங்கியில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 89.40 சதவீதத்தில் இருந்து, 91.20 சதவீதமாக உயரும்.
தாராள கடன்:
முன்னுரிமை பங்குகளை வெளியிடுவதன் மூலம், வங்கியில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 89.39 சதவீதத்தில் இருந்து, 92.52 சதவீதமாக உயரும். இதன் மூலம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலதன இருப்பு விகிதத்தை உயர்த்திக் கொள்ளவும், அதிக அளவில் கடன் வழங்கவும் வழி ஏற்பட்டுள்ளது.ஆர்.சுப்ரமணியகுமார்நிர்வாக இயக்குனர், தலைமை செயல் அதிகாரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|