வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றமில்லை; காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றமில்லை; காப்பீட்டு ஒழுங்கு முறை ... ...  பிரச்னைகளை பட்டியலிட்ட, ‘ஜிம் – 2’ நிறுவனங்கள் பிரச்னைகளை பட்டியலிட்ட, ‘ஜிம் – 2’ நிறுவனங்கள் ...
5 பொது துறை வங்கிகளுக்கு ரூ.21,428 கோடி; பங்கு மூலதனம் வழங்க மத்திய அரசு முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2019
00:14

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளிட்ட, ஐந்து வங்கிகளுக்கு, மத்திய அரசு, 21 ஆயிரத்து, 428 கோடி ரூபாய் பங்கு மூலதனம் வழங்குகிறது.

இதற்காக, இவ்வங்கிகள், மத்திய அரசுக்கு முன்னுரிமை பங்குகள் வழங்கும் தீர்மானத்திற்கு, பங்கு முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.வாராக் கடன் பிரச்னை யால், பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகளின் சொத்து மதிப்பு குறைந்து, மூலதன இருப்பு விகிதத்தை பராமரிக்க முடியாமல் சிரமப்படுகின்றன.

அத்தகைய பொதுத் துறை வங்கிகளின் நிதியாதாரத்தை மேம்படுத்த, 2017 அக்டோபரில், 2.11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மறு பங்கு மூலதன திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.இதில், பட்ஜெட் ஒதுக்கீட்டில், 18 ஆயிரத்து, 139 கோடி ரூபாய்; மறு பங்கு மூலதன கடன் பத்திரங்கள் மூலம், 1.35 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். வங்கிகள், நிதிச் சந்தையில் எஞ்சிய, 58 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டிக் கொள்ளும் என, தெரிவிக்கப்பட்டது.

பேங்க் ஆப் பரோடா:;
இத்திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகள், மத்திய அரசின் பங்கு மூலதனத்தை, இரண்டு ஆண்டுகளாக பெற்று வருகின்றன.இந்த வகையில், பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய ஐந்து வங்கிகளுக்கு, 21 ஆயிரத்து, 428 கோடி ரூபாய் பங்கு மூலதனம் வழங்கப்படுகிறது.

இதற்காக இவ்வங்கிகள், சிறப்பு பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய முன்னுரிமை பங்குகளை, மத்திய அரசுக்கு வழங்க உள்ளன.இதற்கு, இந்த ஐந்து வங்கிகளின் பங்கு முதலீட்டாளர்கள் கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, பஞ்சாப் நேஷனல் பேங்க், பங்கு ஒன்று, 71.66 ரூபாய் வீதம், 80.20 கோடி பங்குகளை வெளியிட்டு, 5,908 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளும். பேங்க் ஆப் பரோடா, முன்னுரிமை பங்குகள் மூலம், 5,042 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பங்கு ஒன்று, 78.84 ரூபாய் வீதம், 52.15 கோடி முன்னுரிமை பங்குகளை வெளியிட்டு, 4,112 கோடி ரூபாய் பெற உள்ளது.

உயரும்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பங்கு ஒன்று, 14.12 ரூபாய் வீதம், 3,806 கோடி ரூபாய் மதிப்பிலான முன்னுரிமை பங்குகளை வெளியிட முடிவு செய்து உள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பங்கு ஒன்று, 37.25 ரூபாய் வீதம், 68.72 கோடி முன்னுரிமை பங்குகளை வெளியிட்டு, 2,560 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இதன் மூலம், இவ்வங்கியில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 89.40 சதவீதத்தில் இருந்து, 91.20 சதவீதமாக உயரும்.

தாராள கடன்:
முன்னுரிமை பங்குகளை வெளியிடுவதன் மூலம், வங்கியில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 89.39 சதவீதத்தில் இருந்து, 92.52 சதவீதமாக உயரும். இதன் மூலம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலதன இருப்பு விகிதத்தை உயர்த்திக் கொள்ளவும், அதிக அளவில் கடன் வழங்கவும் வழி ஏற்பட்டுள்ளது.ஆர்.சுப்ரமணியகுமார்நிர்வாக இயக்குனர், தலைமை செயல் அதிகாரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)