வாகன விற்பனை விலை உயருகிறது: நாளை முதல் அமலுக்கு வருகிறது வாகன விற்பனை விலை உயருகிறது: நாளை முதல் அமலுக்கு வருகிறது ... வங்கி சேமிப்பு கணக்கை சிறப்பாக நிர்வகிக்கும் வழிகள் வங்கி சேமிப்பு கணக்கை சிறப்பாக நிர்வகிக்கும் வழிகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
முதலீடு செய்வதை தடுக்கும் தடைகளை வெல்வது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2019
06:58

முதலீடு செய்வதன் அவசியத்தை உணர்ந்தவர்களில் எல்லாருமே, அதை செயல்படுத்துவதில்லை. பெரும்பாலானோர் முதலீடு செய்வதை பல காரணங்களுக்காக தள்ளிப்போடுகின்றனர். முதலீடு முடிவை செயல்படுத்த தடையாக இருக்கும் பொதுவாக காரணங்களையும், அவற்றை வெல்லும் வழிகளையும் பார்க்கலாம்:

ரிஸ்க் அதிகம்:
முதலீடு செய்வது நல்ல பலனை அளிக்கும் என்பதோடு, முதலீடு செய்வதில் ரிஸ்கும் உண்டு. பலரும் முதலீடு அதிக ரிஸ்க் கொண்டது, என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது என நினைக்கலாம். இதன் காரணமாகவே முதலீட்டை தள்ளிப்போடலாம். முதலீட்டில் ரிஸ்க் உண்டு என்றாலும், பரவலாக்க உத்தி மூலம் ரிஸ்கை பெருமளவு குறைக்கலாம்.பு

த்திசாலித்தனம் இல்லை:
முதலீடு மூலம் அதிக பலன் பெறுவதற்கு தேவையான புத்திசாலித்தனம் இல்லை என, சிலர் நினைக்கலாம். குறிப்பாக சமபங்கு சார்ந்த முதலீட்டை மனதில் வைத்து இவ்வாறு கூறலாம். ஆனால், முதலீடுகள் சந்தையை மிஞ்சும் பலன் தர வேண்டும் என்றில்லை. அவை இலக்குகளுக்கு ஏற்ற பலன் அளிப்பதே முக்கியம்.நேரமின்மை: இன்னும் சிலர் முதலீடு தொடர்பான தகவல்களை தெரிந்து கொண்டு, சரியான முதலீடு எடுக்க போதுமான நேரம் தங்களிடம் இல்லை என நினைக்கலாம். முதலீடு தொடர்பாக முறையான ஆய்வு அவசியம் என்றாலும், அதற்காக முதலீட்டாளரே இதை செய்ய வேண்டும் என்றில்லை. நிதி ஆலோசகர் உதவியை நாடலாம்.

பணம் இல்லை:
முதலீடு செய்யும் அளவுக்கு பணக்காரர் இல்லை என்று பலர் கருதலாம். ஆனால், அதிக பணம் இருந்தால் தான் முதலீடு செய்ய முடியும் என்பது தவறான எண்ணமாகும். எல்லாருக்கும் முதலீடு அவசியம். ஒவ்வொருவரும் முடிந்த தொகையை முதலீடு செய்ய வேண்டும்.அவசரம் என்ன? முதலீடு செய்ய இப்போது அவசரம் இல்லை, பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என சிலர் நினைக்கலாம். அதிலும் குறிப்பாக இளம் வயதினர் இவ்வாறு நினைக்கலாம். இதற்கு மாறாக, இளம் வயதில் முதலீட்டை துவக்குவதே மிகச்சிறந்ததாகும். அப்போது தான் கூட்டு வட்டியின் முழு பலனை பெற முடியும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)