பதிவு செய்த நாள்
02 ஏப்2019
23:17
மும்பை:நேற்று, மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, முதன் முறையாக, 39 ஆயிரம் புள்ளிகளை தாண்டி, நிலை பெற்றது.
நேற்று முன்தினம், முதன் முறையாக, இப்புள்ளிகளை கடந்தாலும், வர்த்தகத்தின் இறுதியில், 38,871.87 புள்ளிகளில் நிலை கொண்டது.நேற்று, சென்செக்ஸ், முன்தினத்தை விட, 184.78 புள்ளிகள் உயர்ந்து, முதன் முறையாக, 39,056,65 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 39,121.69 புள்ளிகள் வரை சென்றது.
தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 44.05 புள்ளிகள் உயர்ந்து, 11,713.20 புள்ளிகளில் நிலை கொண்டது.ரியல் எஸ்டேட், தொலைதொடர்பு, வாகனம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவில் கைமாறின.
மும்பையில் நேற்று, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழுவின் மூன்று நாள் கூட்டம் துவங்கியது. இவ்வங்கி, நாளை வெளியிடும், நிதிக் கொள்கை அறிக்கையில், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ விகிதம் குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பங்குகளில் அதிக முதலீடு மேற்கொள்ளப்படுவதாக, சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|