சேவைகள் துறை வளர்ச்சி தொய்வு சேவைகள் துறை வளர்ச்சி தொய்வு ...  புதிய தொழில் கொள்கை தேர்தலுக்கு பின் வெளியீடு:உற்பத்தி, ஏற்றுமதி, முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை புதிய தொழில் கொள்கை தேர்தலுக்கு பின் வெளியீடு:உற்பத்தி, ஏற்றுமதி, ... ...
நிதி சீர்திருத்தம், வரி குறைப்பு நடவடிக்கை தொடரும்:மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2019
00:02

புதுடில்லி:‘‘மத்தியில் மீண்டும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி சீர்திருத்தங்களும், வரி குறைப்பு நடவடிக்கைகளும் தொடரும்,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


அவர், இந்திய தொழிலக கூட்டமைப்பின், ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பேசியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, ஏராளமான நிதி சீர்திருத்தங்களை செய்துள்ளது. அரசின் வருவாயை பெருக்கி, செலவைச் சுருக்கி, நிதிப் பற்றாக்குறை இலக்கை குறைத்து உள்ளது.


பல்வேறு வரிகள் குறைக்கப்பட்டு உள்ளன.பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தால், இத்தகைய நிதி சீர்திருத்தங்களும், வரி குறைப்பு நடவடிக்கையும் தொடரும்.ஜி.எஸ்.டி.,வரி கொள்கைகள் குறித்த நிலைப்பாட்டில், இந்த இரு அம்சங்களை செயல்படுத்துவதில், நான் மிகத் தெளிவாக இருக்கிறேன்.சர்வதேச அளவில் பெரிய வளர்ச்சி அல்லது ஆதரவு இல்லாத சூழலிலும், நம் நாட்டின் பொருளாதாரம், 7 – 7.5 சதவீத வளர்சசி கண்டுள்ளது.


வளர்ச்சியை குறைய விடாமலும், அதேசமயம்,ஸ்திரமாக நீடிக்குமாறும் பார்த்துக் கொண்டோம். அடுத்து, மேலும் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.கடந்த, 20 மாதங்களில், ஜி.எஸ்.டி.,யில், சிமென்ட் தவிர்த்து, பெருவாரியான பொருட்கள், 28 சதவீத வரி வரம்பில் இருந்து, 18 மற்றும் 12 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டன.


அடுத்து, 28 சதவீத வரியை நீக்க, அதிக காலம் தேவைப்படாது. கடந்த, ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, வரி விகிதங்களை உயர்த்தவில்லை.ஒரு சில வரியினங்களில், வரி செலுத்து வோர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், வரி வருவாயும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)