பதிவு செய்த நாள்
06 ஏப்2019
23:29
பி.எஸ்.என்.எல்., சென்னை வட்டத்தின், மார்ச் மாத வருவாய், கடந்த ஆண்டை விட, 150 சதவீதம் அதிகரித்துள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த, 2018 – 19ம் நிதி ஆண்டு முடிந்து, 2019 – 20ம் புதிய நிதி ஆண்டு துவங்கி உள்ளது. இந் நிலையில், ஒவ்வொரு நிறுவனங்களும், மார்ச் மாத வருவாய் குறித்தும், விற்பனை குறித்தும் தகவல்கள் வெளியிட்டு வருகின்றன. இதில், பி.எஸ்.என்.எல்., சென்னை வட்டம், தன் மார்ச் மாத வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:சென்னை, பி.எஸ்.என்.எல்.,லின் மார்ச் மாத வருவாய், 150 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த, 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில், 68.61 கோடி ரூபாயாக வருவாய் இருந்தது.இது, 2019ம் ஆண்டு மார்சில், 101.45 கோடி ரூபாயாக உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, மார்சில் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஆண்டின் மொத்த வருவாய், தணிக்கை செய்யப்பட்ட பின் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|