பதிவு செய்த நாள்
06 ஏப்2019
23:31
ஈரோடு:ரயான் நுால் கிலோவுக்கு, 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், ‘ஆர்டர்’ எடுக்கப்பட்ட, 1 மீட்டர் துணிக்கு, 1.50 ரூபாய் வரை, விசைத்தறியாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு சுற்று வட்டாரத்தில், 5,000க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் துணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக, ரயான் நுால், 1 கிலோ, 188 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று கிலோ, 208 ரூபாய்க்கு விற்பனையானது.
இது பற்றி, ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர், கந்தவேல் கூறியதாவது:நுால் தட்டுப்பாட்டால், நுால் விலை உயர்கிறது. இதனால், கடந்த, 20 நாட்களுக்குள், கிலோவுக்கு, 20 ரூபாய் வரை, விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், 1 மீட்டர் துணிக்கு, 1.50 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.
இது போன்ற பாதிப்பை குறைக்க, மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே நுால் விலையை நிர்ணயித்து அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|