பதிவு செய்த நாள்
07 ஏப்2019
23:38
குறைந்த விலையிலான வீடுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், கட்டுமான நிறுவனங்கள், குடியிருப்புகளின் அளவில் சிறிய வீடுகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, 'அனராக்' நடத்திய ஆய்வில், 2014 முதல், 2018ம் ஆண்டு வரை, மும்பை, டில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட ஏழு முக்கிய நகரங்களில், வீடுகளின் அளவு சராசரியாக,17 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது.
மெட்ரோ நகரங்களில் குடியிருப்புகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், கட்டுமான நிறுவனங்கள், வாங்குபவர்களின் தேவையை மனதில் கொண்டு, வீடுகளின் அளவை குறைக்கும் உத்தியை கையாண்டு வருகின்றன.
மேலும் வீடு வாங்கும் இளம் தலைமுறையினர், அதிக பராமரிப்பு செலவுகள் கொண்ட பெரிய வீடுகளை விட, சிறிய வீடுகளை விரும்புகின்றனர். இது போன்ற காரணங்களால், அடக்கமான வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.இந்த மாற்றம், 40 லட்சம் ரூபாய் வரையான விலை பிரிவில் நிகழ்ந்து வருகிறது. வாங்க கூடிய விலையிலான வீடுகளுக்கு அரசு தரும் சலுகையும், இந்த மாற்றத்திற்கு ஒரு காரணமாக அமைகிறது.
மேலும், பெரிய அளவிலான வீடுகள் நடுத்தர மக்களால் வாங்க முடியாத விலையில் இருப்பதும், முக்கிய காரணமாக அமைகிறது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|