பதிவு செய்த நாள்
09 ஏப்2019
11:37
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரு தினங்களாக மந்தமான நிலையிலேயே வர்த்தகமாகி கொண்டிருக்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 35 புள்ளிகளும், நிப்டி 5.65 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடர்ந்த நிலையில் சற்றுநேரத்திலேயே சரிவை சந்தித்தன.
காலை 11.30 மணியளவில் பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்பட்டன. சென்செக்ஸ் 18.92 புள்ளிகள் சரிந்து 38,681ஆகவும், நிப்டி 14.45 புள்ளிகள் சரிந்து 11,590ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு உயர்வு
பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தபோதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் வர்த்தகமாகின. காலை 11.30 மணியளவில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.69.52ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|