பதிவு செய்த நாள்
09 ஏப்2019
23:52
புதுடில்லி:பயணியர் வாகனம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றுக்கான, ஜி.எஸ்.டி., 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என, மத்திய அரசுக்கு, இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவர், ராஜன் வதேரா கூறியதாவது:அடுத்த ஆண்டு, ஏப்ரல் முதல், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டிற்கான, ‘பாரத் ஸ்டேஜ் – 6’ விதிமுறை அமலுக்கு வருகிறது. இத்துடன், மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் வாகன தயாரிப்பாளர்கள் உள்ளனர்.இதன் காரணமாக, வாகன தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, கடந்த ஆறு மாதங்களாக, வாகன விற்பனை சரிந்துள்ளது.இந்நிலையில், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப, வாகன தயாரிப்பில் தொழில்நுட்பங்களுக்கு செலவிடுவதால், விற்பனை விலையை, 10 –- 15 சதவீதம் உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வாகன விற்பனையில், 10 சதவீத விலை உயர்வு கூட, இரு சக்கர வாகனங்கள் விற்பனையை பாதிக்கும். அதனால், வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட வேண்டும்.தற்போது, வாகனங்களுக்கு, 28 சதவீத, ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது. இத்துடன், வாகனங்களின் நீளம், இன்ஜின் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப, 1 – 15 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.எனவே, வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி., 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.
இது, வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் பயன் அளிக்கும்.வாகன விலை அதிகரித்தால், விற்பனை குறைந்து, அரசுக்கு வரி வருவாய் குறையும். எனவே, வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|