பதிவு செய்த நாள்
10 ஏப்2019
10:57
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாவது நாளான இன்று(ஏப்.,10) சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 11.68 புள்ளிகள் சரிந்து 38,927.54ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 2 புள்ளிகள் சரிந்து 11,671.70ஆகவும் வர்த்தகமாகின.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் சுணக்கம் காரணமாக இந்திய உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகளிலும் சரிவு காணப்படுகின்றன. தொடர்ந்து காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 62 புள்ளிகளும், நிப்டி 16 புள்ளிகளும் சரிந்து வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு உயர்வு
பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகின்றன. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் உயர்ந்து ரூ.69.09ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|