பதிவு செய்த நாள்
10 ஏப்2019
23:25
புதுடில்லி:இந்தியாவில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த, ‘நோமுரா’ ஆய்வு மையம், இந்தியாவின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை குறித்து வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கை:கவரிங் ஆபரணங்கள், விளையாட்டு பொருட்கள், அறிவியல் சாதனங்கள், ஜவுளி இயந்திரங்கள், மின்விசிறி, ரப்பர், பிளாஸ்டிக், தோல் மற்றும் அது சார்ந்த பொருட்கள் துறையில், தனி கவனம் செலுத்தினால், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்.
அதேசமயம், இப்பொருட்களின் இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை வேலைவாய்ப்பில், தயாரிப்பு துறையின் பங்கு, 70 சதவீதமாக, அதாவது, 3.60 கோடி என்ற அளவில் உள்ளதாக, மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வேளாண் துறையில் இருந்து வருவோருக்கும்,பிற துறையினருக்கும் வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய பொறுப்பில், தயாரிப்பு துறை உள்ளது.அதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில், குறிப்பிட்ட பிரிவுகளில் கூடுதல் கவனம்செலுத்தி, இறக்குமதி பொருட்களுக்கு பதிலாக, மாற்றுப் பொருட்கள் தயாரிப்பில் இறங்கினால், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்.
இதன் மூலம், அடுத்த, 4-5 ஆண்டுகளில், 75 லட்சம் முதல், ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|