பதிவு செய்த நாள்
10 ஏப்2019
23:36
புதுடில்லி:பொது சேமநல நிதிக்கான வட்டி விகிதம், ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டிற்கு, 8 சதவீதமாக, மாற்றமின்றி நீடிக்கும் என, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு, 2019 – -20ம் நிதியாண்டில், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பொது சேமநல நிதி மற்றும் இதர சேமநல நிதி திட்டங்களுக்கான வட்டி, 8 சதவீதமாக, மாற்றமின்றி நீடிக்கும்.மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின், சேமநல நிதியங்களுக்கும், இந்த வட்டி விகிதம் பொருந்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம், தேசிய சேமிப்பு பத்திரங்கள் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு வட்டியில் மாற்றம் ஏதும் இல்லை என, தெரிவிக்கப்பட்டு இருந்ததுகுறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|