பதிவு செய்த நாள்
11 ஏப்2019
23:33
ஜி.எஸ்.டி., பயனை பெறுவது தொடர்பாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து, குறைகள் தொடர்பாக, 4.80 லட்சம் கடிதங்கள், தேசிய மிகை லாப தடுப்பு ஆணையத்திற்கு வந்துள்ளன.
ஜி.எஸ்.டி.,யை பயன்படுத்தி வர்த்தகர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதை தடுக்கும் வகையில், ‘தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையம்’ அமைக்கப்பட்டது. ஜி.எஸ்.டி.,யின் முழுமையான பயன்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே, இந்த ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கம்.
இந்த ஆணையம் அமைக்கப்பட்டது முதல், இதுவரை பல லட்சம் கடிதங்கள் குறை தொடர்பாக வந்துள்ளன.இது குறித்து, தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையம் வெளியிட்ட தகவல்களின் விபரம்: ஆணையம் அமைக்கப்பட்ட பின், இது வரை குறைகள் தொடர்பான, 4.80 லட்சம் கடிதங்கள் வந்துள்ளன.
இதில், 4.33 லட்சம் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்கள், பொதுமக்களிடம் இருந்து வரும் குறைகளை ஆராய்வதற்காக, தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–- நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|