பதிவு செய்த நாள்
12 ஏப்2019
03:38
நியூயார்க்:அரசு மேற்ெகாள்ளும் சீர்திருத்தங்களின் பலன், கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாக, ‘பிக்கி’ அமைப்பு, ‘டுவிட்டரில்’ தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின், நியூயார்க் நகரில், உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் மாநாடு, இன்று துவங்கி, 14ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் பங்கேற்க வந்துள்ள, அருண் ஜெட்லி, பிக்கி, இந்திய துாதரகம் மற்றும் அமெரிக்க – இந்திய குழுமத்தின் கருத்தரங்கில் பங்கேற்றார்.
ஏராளமான முதலீட்டாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், அருண் ஜெட்லி பேசியவற்றை, பிக்கி மற்றும் இந்திய துாதரகம், டுவிட்டரில் வெளியிட்டு உள்ளன.அதன் விபரம் :சீர்திருத்தங்கள் செய்ய முடிவெடுத்தால், அவற்றின் பலன், கடைகோடி மனிதனுக்கும் கிடைப்பதாக இருக்க வேண்டும்.
இந்திய மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு, 99 சதவீத மக்களுக்கு கழிப்பறை வசதி, சமையலுக்கு நவீன காஸ் சிலிண்டர்கள், கிராமப்புறங்களில் சாலை இணைப்பு வசதி, அனைவருக்கும் வீடு ஆகியவை சமூக சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.அடுத்த ஐந்து ஆண்டுகளில், வறுமையை குறைப்பது, மிகச் சிறந்த கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவது, குடிபெயர்வோரை சமாளிக்க, புதிய நகரங்களை உருவாக்குவது, அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசியதாக அதில் கூறப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|