பதிவு செய்த நாள்
13 ஏப்2019
00:38
பெங்களுரு:டி.சி.எஸ்., என, சுருக்கமாக அழைக்கப்படும், ‘டாடா கன்சல்டன்சி’ நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில், 8,126 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சந்தை எதிர்பார்த்ததை விட அதிகம்.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ராஜேஷ் கோபிநாதன் கூறியதாவது:
கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காம் காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், 17.70 சதவீதம் அதிகரித்து, 8,126 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 2017 – -18ம் நிதியாண்டின், இதே காலத்தில், 7,981 கோடி ரூபாயாக இருந்தது.நிகர விற்பனை, 18.5 சதவீதம் உயர்ந்து, 32 ஆயிரத்து, 75 கோடியில் இருந்து, 38 ஆயிரத்து, 10 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த, 15 காலாண்டுகளில், இம்முறை தான், வருவாய் வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது. அதுபோல, முந்தைய மூன்று காலாண்டுகளை விட, அதிக, ‘ஆர்டர்’கள் கிடைத்துள்ளன. நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு, 25.1 சதவீதமாக உள்ளது.நிறுவனம், கடந்த நிதியாண்டுக்கு, இறுதி டிவிடெண்டாக, பங்கு ஒன்றுக்கு, 18 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
‘இன்போசிஸ்’ நிகர லாபம்‘
இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிகர லாபம், 2018 – -19, ஜன., – மார்ச் காலாண்டில், 10.5 சதவீதம் உயர்ந்து, 4,078 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின், இதே காலத்தில், 3,690 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், வருவாய், 19.1 சதவீதம் உயர்ந்து, 18 ஆயிரத்து, 83 கோடியில் இருந்து, 21 ஆயிரத்து 539 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.எனினும், முழு நிதியாண்டில், நிகர லாபம், 3.9 சதவீதம் குறைந்து, 15 ஆயிரத்து, 410 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. அதேசமயம் வருவாய், 17.2 சதவீதம் உயர்ந்து, 82 ஆயிரத்து, 675 கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|