பதிவு செய்த நாள்
14 ஏப்2019
00:27
மும்பை:ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, ரமேஷ் பாவா, கைது செய்யப்பட்டார்.இது, இந்நிறுவனம் தொடர்பாக, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மோசடி புலனாய்வு அலுவலக அதிகாரிகளின் இரண்டாவது கைது நடவடிக்கை.
இம்மாத துவக்கத்தில், பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தின் முன்னாள் துணைத் தலைவர், அரிசங்கரன் கைது செய்யப்பட்டார்.ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம், 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இது குறித்த தகவல்கள் அம்பலமானதை தொடர்ந்து, 2018 செப்டம்பரில், ரமேஷ் பாவா திடீரென பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, மோசடி தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தது. போலி நிறுவனங்களை உருவாக்கி, பணி ஒப்பந்தங்கள் வழங்கியது போல மோசடி செய்து, 74 கோடி ரூபாய் சுருட்டியதாக, ரமேஷ் பாவா உட்பட, மூன்று உயரதிகாரிகள் மீது, கடந்த பிப்ரவரியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அமலாக்க இயக்குனரகம்,
சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ், பதிவு செய்த இவ்வழக்கில், ரமேஷ் பாவா கைதாவதை தவிர்க்க, முன்ஜாமின் பெற்று இருந்தார்.சமீபத்தில், இந்த முன்ஜாமினை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.இந்நிலையில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, ரமேஷ் பாவா, டில்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.அவரிடம், மோசடி தடுப்பு புலனாய்வு அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|