தேயிலை ஏலத்தில் அதிக வருமானம் தேயிலை ஏலத்தில் அதிக வருமானம் ... விடு­முறை பயண கடன் வச­தி­யில் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் விடு­முறை பயண கடன் வச­தி­யில் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் ...
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., முன்னாள், சி.இ.ஓ., கைதுபோலி நிறுவனங்களை உருவாக்கி மோசடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2019
00:27

மும்பை:ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, ரமேஷ் பாவா, கைது செய்யப்பட்டார்.இது, இந்நிறுவனம் தொடர்பாக, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மோசடி புலனாய்வு அலுவலக அதிகாரிகளின் இரண்டாவது கைது நடவடிக்கை.


இம்மாத துவக்கத்தில், பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தின் முன்னாள் துணைத் தலைவர், அரிசங்கரன் கைது செய்யப்பட்டார்.ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம், 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இது குறித்த தகவல்கள் அம்பலமானதை தொடர்ந்து, 2018 செப்டம்பரில், ரமேஷ் பாவா திடீரென பதவியை ராஜினாமா செய்தார்.


இதையடுத்து, மோசடி தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தது. போலி நிறுவனங்களை உருவாக்கி, பணி ஒப்பந்தங்கள் வழங்கியது போல மோசடி செய்து, 74 கோடி ரூபாய் சுருட்டியதாக, ரமேஷ் பாவா உட்பட, மூன்று உயரதிகாரிகள் மீது, கடந்த பிப்ரவரியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அமலாக்க இயக்குனரகம்,


சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ், பதிவு செய்த இவ்வழக்கில், ரமேஷ் பாவா கைதாவதை தவிர்க்க, முன்ஜாமின் பெற்று இருந்தார்.சமீபத்தில், இந்த முன்ஜாமினை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.இந்நிலையில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, ரமேஷ் பாவா, டில்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.அவரிடம், மோசடி தடுப்பு புலனாய்வு அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)