பதிவு செய்த நாள்
14 ஏப்2019
23:48
பொதுநல சேம நல நிதியான, பி.பி.எப்., முதலீட்டை பொருத்தவரை ஏப்ரல் மாதம் மிகவும்
முக்கியமானது. எப்படி என பார்க்கலாம்:
மற்ற சிறுசேமிப்பு திட்டங்கள் போல, பி.பி.எப்.,பிற்கான வட்டி விகிதம் காலாண்டு அடிப்
படையில் அறிவிக்கப்படுகிறது. எனினும், ஒவ்வொரு ஆண்டுக்குமான வட்டி, மார்ச் 31ம் தேதி கிரெடிட் செய்யப்படுகிறது. எனவே, ஏப்ரல் மாத துவக்கத்தில் கணக்கில் சேர்ந்துள்ள
வட்டியை அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக, பி.பி.எப்., கணக்கில் செலுத்தும் தொகையை மாதத்தின், 5ம் தேதிக்குள் செலுத்த
வேண்டும். அப்போது தான் அந்த மாதத்திற்கான வட்டியை பெற முடியும். ஏப்ரல், 5ம் தேதிக்குள் பணம் செலுத்தினால், முழுவதுமாக ஓராண்டிற்கான வட்டியை பெறலாம்.நீண்ட கால திட்டமான, பி.பி.எப்., 15 ஆண்டில் முதிர்வடைகிறது. 15ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் தான் கணக்கு முதிர்வடையும். கணக்கு முதிர்வடைந்த பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு
நீட்டித்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டித்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கும்.ஏப்ரல் மாதம் அல்லது அதன் பிறகு, ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய குறைந்த பட்ச தொகையை செலுத்த தவறினால், கணக்கு செயலிழந்துவிடும். குறைந்தபட்ச தொகையுடன், 50 ரூபாய் அபராதம் செலுத்தி கணக்கை புதுப்பித்துக்கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|