பதிவு செய்த நாள்
14 ஏப்2019
23:50
கோடை
விடுமுறை பயணங்களை மேற்கொள்ளும் போது தேவையான திட்டமிடலில்,
நிதி வசதியையும் முக்கியமாக கருத வேண்டும். இத்தகைய
பயணத்திற்காக ஏற்கனவே திட்டமிட்டு சேமித்திருக்கவில்லை எனில்,
விடுமுறை கால கடன் வசதியை நாடலாம். வங்கிகள் மற்றும் நிதி நுட்ப
நிறுவனங்கள் இத்தகைய கடன்களை அளிக்கின்றன. இந்த வசதியை நாடும்
போது மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள்:
தேவையான அளவு கடன்:
பொதுவாக, வாழ்வியல் காரணங்களுக்கான கடன் வசதியை நாடாமல் இருப்பதே
நல்லது. எனினும் தவிர்க்க இயலாத சூழலில், விடுமுறை பயணத்திற்கான
கடன் வசதியை பெறும் நிலை இருந்தால், தேவையான அளவு மட்டுமே கடன் வாங்க
வேண்டும். மற்ற கடன்களோடு சேர்த்து மாதத்தவணை சம்பளத்தில், 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கடனுக்கான கால அளவு:
விடுமுறை பயணத்திற்காக, முதலீட்டில் கை வைப்பதைவிட கடன் வசதியை நாடுவது
ஏற்றது தான். ஆனால், கடனுக்கான கால அளவை சரியாக தேர்வு செய்ய வேண்டும். குறுகிய காலம் எனில் வட்டி அதிகம் இருக்கலாம். ஆனால், திரும்ப செலுத்தும் தொகை குறைவாக இருக்கலாம்.
கடன் நிபந்தனைகள்:
கடனை திரும்பி செலுத்துவது தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை
கவனிக்க வேண்டும். இவற்றில் சாதகமான அம்சங்களை கொண்ட வங்கியை தேர்வு செய்ய வேண்டும். ஒரு சில வங்கிகள் முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கு அபராதம் விதிக்கலாம்.
செலவு கணக்கு:
விடுமுறைக்கான தொகை கிடைத்துவிட்டதால் இஷ்டம் போல செலவு செய்யக்கூடாது. பயணத்திற்கு என்று தெளிவான செலவு பட்ஜெட்டை வகுத்துக்கொள்ள வேண்டும். அது அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். இந்த பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காப்பீடு அவசியம்:
விடுமுறைக்கான காப்பீடு வசதி இப்போது மெல்ல பிரபலமாகி வருகிறது. உங்கள் பயணத்திற்கு பொருத்தமான பயண காப்பீடு எடுத்துக்கொண்டால், எதிர்பாராத நெருக்கடிகள் குறித்து கவலை இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக, வெளிநாட்டு பயணம் எனில் இது மிகவும் அவசியம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|