பதிவு செய்த நாள்
15 ஏப்2019
23:58
புதுடில்லி:பூக்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள, ‘பெர்ன்ஸ் என் பீட்டல்ஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிடுகிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான, விகாஸ் குட்குட்டியா கூறியுள்ளதாவது:அடுத்த, 14 முதல், 18 மாதங்களுக்குள்ளாக பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு திட்டமிட்டு உள்ளோம். பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிறுவனத்துக்கு, 120 நகரங்களில், 300 விற்பனை நிலையங்கள் உள்ளன.வரும், 2020ம் ஆண்டு இறுதிக்குள், விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை, 500 ஆக உயர்த்த திட்டமிட்டு உள்ளோம். கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் விற்றுமுதல், 360 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நிறுவனத்தை மேலும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த கட்டமாக நுகர்பொருட்கள், விருந்தோம்பல் ஆகிய துறைகளில் கால்பதிக்க உள்ளோம்.பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான ஆரம்ப பணிகள் துவங்கி விட்டன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|