இந்தியாவில், ‘ஆப்பிள் ஐபோன்’ தயாரிப்பு:‘பாக்ஸ்கான்’ நிறுவனம் அறிவிப்பு இந்தியாவில், ‘ஆப்பிள் ஐபோன்’ தயாரிப்பு:‘பாக்ஸ்கான்’ நிறுவனம் அறிவிப்பு ... விப்ரோ நிகர லாபம் ரூ.2,494 கோடியாக உயர்வு விப்ரோ நிகர லாபம் ரூ.2,494 கோடியாக உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
88 நிறுவனங்களின், 50 சதவீத வாராக்கடன் மீட்பு:திவால் நடவடிக்கையால் விரைவான வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2019
00:18

புதுடில்லி:திவால் நடவடிக்கைக்கு ஆளான, 88 நிறுவனங்களின், 1.42 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனில், பிப்ரவரி நிலவரப்படி, 68 ஆயிரத்து, 766 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. கடந்த, 2016ல் திவால் சட்டம் அறிமுகமான பின், இச்சட்டத்தின் கீழ், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை, வாராக்கடனை வசூலிப்பது அதிகரித்துள்ளது.


தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, நிறுவனங்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை உள்ளிட்ட விபரங்களை, இந்திய திவால் சட்ட வாரியம் வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


இந்தாண்டு பிப்ரவரி நிலவரப்படி, 1.42 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனுக்காக, 88 நிறுவனங்கள் மீது, திவால் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதில், வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு வரவேண்டிய கடன், 1.36 லட்சம் கோடி ரூபாய்.அன்றாட வர்த்தகத்திற்கு சரக்கு, சேவைகள் உள்ளிட்டவற்றை வழங்கிய நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை, 6,469 கோடி ரூபாய்.தீர்வுஆக மொத்தம், 88 நிறுவனங்களிடம் வரவேண்டிய, 1.42 லட்சம் கோடி ரூபாயில், பிப்ரவரி நிலவரப்படி, 68 ஆயிரத்து, 766 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.


இதில், வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு, 65 ஆயிரத்து, 635 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. சரக்கு, சேவைகளை வழங்கிய நிறுவனங்கள், 3,131 கோடி ரூபாய் பெற்றுள்ளன.இந்த, 88 நிறுவனங்களில், ஒரு சில நிறுவனங்களின் கடன், முழுவதுமாக திரும்பச் செலுத்தப்பட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.


11 வழக்குகளில், வங்கிகள், 100 சதவீத கடனை திரும்பப் பெற்றுள்ளன. அதேசமயம், சரக்கு, சேவைகள் வழங்கிய நிறுவனங்களில், ஆறு நிறுவனங்களுக்குத் தான், முழு தொகையும் திரும்பக் கிடைத்துள்ளது. மூன்று வழக்குகளில், 100 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொகையை, வங்கிகள் திரும்பப் பெற்றுள்ளன.திவால் சட்டத்தின் கீழ், தீர்வு காணப்பட்ட மிகப் பெரிய நிறுவனங்களில், ‘பூஷன் ஸ்டீல், எலக்ட்ரோ ஸ்டீல், மோனட் இஸ்பட்’ ஆகியவை இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பூஷன் ஸ்டீல் – எலக்ட்ரோ ஸ்டீல்திவால் சட்டத்தின் கீழ் மேற்கொண்ட நடவடிக்கையில், பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை, டாடா ஸ்டீல் நிறுவனம் கையகப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தில், 57 ஆயிரத்து, 505 கோடி ரூபாய் மொத்த வாராக் கடனில், வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு, 63.49 சதவீத தொகை கிடைத்துள்ளது. சரக்கு, சேவைகள் வழங்கிய நிறுவனங்கள், 80.94 சதவீத தொகையை திரும்பப் பெற்றுள்ளன.


வேதாந்தா குழுமம், எலக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதில், 13 ஆயிரத்து, 958 கோடி ரூபாய் வாராக்கடனில், 40.38 சதவீத தொகையை, வங்கிகள், நிதி நிறுவனங்கள் பெற்றுள்ளன.மோனட் இஸ்பட் அண்டு எனர்ஜி நிறுவனத்திடம் வசூலிக்க வேண்டிய, 11 ஆயிரத்து, 478 கோடி ரூபாய் கடனில், வங்கிகளுக்கு, 26.26 சதவீதம்; வர்த்தக நடைமுறைகளுக்கு கடன் தந்த நிறுவனங்களுக்கு, 5.40 சதவீத தொகை திரும்பக் கிடைத்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)