பதிவு செய்த நாள்
16 ஏப்2019
14:53
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் முதன்முறையாக தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 11,800 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றமான சூழல், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் வங்கி, உலோகம், கச்சா எண்ணெய், எரிவாயு, ஆட்டோமொபைல், டெலிகாம் போன்ற துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின.
காலையில் சென்செக்ஸ் 239 புள்ளிகளும், நிப்டி 47 புள்ளிகளும் உயர்வுடன் துவங்கிய நிலையில், தொடர்ந்து மெல்ல மெல்ல உயர்வை கண்டன. மதியம் 2.45 மணியளவில் சென்செக்ஸ் 430 புள்ளிகள் உயர்ந்து 39,336.18ஆகவும், நிப்டி 116 புள்ளிகள் உயர்ந்து 11,803 ஆகவும் வர்த்தகமாகின. இதன்மூலம் நிப்டி முதன்முறையாக 11,800 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|