‘ஜெட் ஏர்வேஸ்’சுக்கு விரைவில் நிதியுதவி; இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை‘ஜெட் ஏர்வேஸ்’சுக்கு விரைவில் நிதியுதவி; இயல்பு நிலைக்கு திரும்ப ... ... மூடப்பட்டது, ‘ஜெட் ஏர்வேஸ்’ மூடப்பட்டது, ‘ஜெட் ஏர்வேஸ்’ ...
நாட்டின் ஏற்றுமதியில் புதிய சாதனை; முதன் முறையாக, ரூ.37 லட்சம் கோடியை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2019
07:14

புதுடில்லி: கடந்த, 2018 – -19ம் நிதி­யாண்­டில், நாட்­டின் ஏற்­று­மதி, 7.97 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, முதன் முறை­யாக, 50 ஆயி­ரம் கோடி டாலரை தாண்டி, 53 ஆயி­ரத்து, 540 கோடி டாலரை எட்­டி­யுள்­ள­தாக, மத்­திய வர்த்­தக அமைச்­ச­கம் மதிப்­பிட்­டுள்­ளது. இது, ரூபாய் மதிப்­பில், 37 லட்­சத்து, 40 ஆயி­ரத்து, 800 கோடி­யா­கும்.

கடந்த, மார்ச்­சில், முக்­கி­ய­மான, 30 பொருட்­களில், 20 பொருட்­களின் ஏற்­று­மதி உயர்ந்­துள்­ளது. மருந்து, ரசா­ய­னம், பொறி­யி­யல் துறை­களில் வளர்ச்சி நன்கு இருந்­த­தால், சரக்கு ஏற்­று­மதி, ஐந்து மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, 11 சத­வீ­தம் அதி­க­ரித்து, 3,250 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. கடந்த, 2018 அக்­டோ­ப­ரில், இப்­பி­ரிவு, 17.86 சத­வீத வளர்ச்­சியை எட்­டி­இ­ருந்­தது. கடந்த நிதி­யாண்டில், சரக்கு ஏற்­று­மதி, 33 ஆயி­ரத்து 100 கோடி டால­ராக ஏற்­றம் கண்­டுள்­ளது. இதற்கு முன், அதி­க­பட்­ச­மாக, 2013 – -14ம் நிதி­யாண்­டில், 31 ஆயி­ரத்து 440 கோடி டாலர் ஏற்­று­மதி நடை­பெற்­றது. இதன் மூலம், ஐந்து நிதி­யாண்­டு­க­ளுக்கு பின், சரக்கு ஏற்­று­ம­தி­யில் புதிய உச்­சம் எட்­டப்­பட்­டுள்­ளது.

வர்த்தக பற்றாக்குறை:
மார்ச்­சில், இறக்­கு­மதி, 1.44 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 43 ஆயி­ரத்து, 440 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. கடந்த நிதி­யாண்­டில், இறக்­கு­மதி, 8.99 சத­வீ­தம் அதி­க­ரித்து, 50 ஆயி­ரத்து 744 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இது, ரூபாய் மதிப்­பில், 35 லட்­சத்து, 52 ஆயி­ரத்து, 80 கோடி­யா­கும். இத­னால், நாட்­டின் வர்த்­த­கப் பற்­றாக்­குறை, 16 ஆயி­ரத்து 200 கோடி டால­ரில் இருந்து,17ஆயி­ரத்து 642 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. கடந்த நிதி­யாண்­டில், பெட்­ரோ­லி­யப் பொருட்­கள், பிளாஸ்­டிக், ரசா­ய­னங்­கள் ஆகி­ய­வற்­றின் ஏற்­று­மதி, முறையே, 28, 25.6 மற்­றும் 22 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.மருந்து, 11 சத­வீ­தம், பொறி­யி­யல் சாத­னங்­கள், 6.36 சத­வீத வளர்ச்சி கண்­டுள்ளன.

எண்­ணெய் இறக்­கு­மதி, 29.27 சத­வீ­தம் உயர்ந்து, 14 ஆயி­ரத்து, 47 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. எண்­ணெய் சாரா பொருட்­கள் இறக்­கு­மதி, 2.82 சத­வீ­தம் அதி­க­ரித்து, 36 ஆயி­ரத்து, 697 கோடி டால­ராக வளர்ச்சி கண்­டுள்­ளது.

இது குறித்து, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில்­துறை வெளி­யிட்­டுள்ள அறிக்கை: சர்­வ­தேச மந்­த­நி­லை­யால், மூன்று நிதி­யாண்­டு­க­ளாக, சரக்கு ஏற்­று­மதி, அதிக ஏற்ற, இறக்­க­மின்றி காணப்­பட்­டது. இத்­த­கைய சூழ­லி­லும், ஐந்து நிதி­யாண்­டு­க­ளுக்­குப் பின், 2018- – 19ம் நிதி­யாண்­டில், சரக்கு ஏற்­று­மதி, இது­வரை இல்­லாத வளர்ச்­சியை கண்­டுள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச வர்த்­த­கப் பதற்­றம், சில நாடு­களின் சுய வர்த்­தக மேம்­பாட்டு கொள்­கை­கள் போன்ற சூழ­லுக்கு நடுவே, இந்­தி­யா­வின் ஏற்­று­மதி அதி­க­ரித்­தி­ருப்­பது சிறப்­பா­கும். ஏற்­று­ம­தியை மேலும் அதி­க­ரிக்க, வேளாண் பொருட்­க­ளுக்கு வட்டி மானி­யம், ஜி.எஸ்.டி.,யில் விலக்கு, சுல­ப­மான கடன் வசதி, ஆய்வு மற்­றும் மேம்­பாட்­டுக்கு, வரி குறைப்பு உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­லாம்.
–கணேஷ் குமார் குப்தா, தலை­வர், இந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்பு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)